( எம்.எப்.எம்.பஸீர்)
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழு, முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித்த சேனாரத்ன உள்ளிட்ட மூவருக்கு எதிராக தொடர்ந்துள்ள வழக்கை எதிர்வரும் நவம்பர் 10 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தீர்மானித்தது.
மேல் நீதிமன்ற நீதிபதி மொஹம்மட் இஸ்ஸதீன் இதற்கான உத்தரவை இன்று பிறப்பித்தார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதலாம் திகதிக்கும் அவ்வாண்டின் நவம்பர் மாதம் முதலாம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் முகத்துவாரம் மீன் பிடித் துறைமுகத்தை, சீ கல்ப் யூ.கே. பிரைவட் லிமிடட் எனும் நிறுவனத்துக்கு குறைந்த வருமானத்துக்கு குத்தகைக்கு கொடுப்பதற்காக மீன் பிடித்துறைமுக கூட்டுத்தாபனத்தை தூண்டியதன் ஊடாக அரசுக்கு நட்டம் ஏற்படுத்தியதாகக் கூறி, இலஞ்ச ஊழல் சட்டத்தின் 70 ஆம் பிரிவின் கீழ் இவ்வழக்கு தொடரப்பட்டுள்ளது.
வழக்கில் ராஜித்த சேனாரத்னவுக்கு மேலதிகமாக மீன் பிடித் துறைமுக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் அதிகாரிகளான உபாலி லியனகே, நீல் ரவீந்ர முனசிங்க ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM