கவுண்டமணி நலமாக உள்ளதாக அவரது செய்தி தொடர்பாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சிரிப்புக்கு மறு உருவம் கொடுத்து, நகைச்சுவையை தன் வசப்படுத்தி கடந்த 39 வருடங்களுக்கும் மேலாக காமெடி ஜாம்பவனாக திகந்து வருபவர் கவுண்டமணி. இவர் தற்போது சில படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறது. இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’, ‘வாய்மை’ ஆகிய படங்கள் இவருக்கு சரியான ரீ-என்ட்ரி படங்களாக அமைந்தன.
இந்நிலையில், கவுண்டமணி மாரடைப்பால் மரணமடைந்து விட்டதாக நேற்று முதல் ஒரு செய்தி கோலிவுட் வட்டாரத்தில் பரவி வந்தது. இதையடுத்து கோலிவுட் உலகம் பரபரப்பானது. இந்த செய்தி உண்மைதானா? என்று பலருக்கும் கேள்வி எழுந்தது. இந்நிலையில், இந்த செய்திக்கு விளக்கம் அளிக்கும் கவுண்டமணியின் செய்தி தொடர்பாளர் விஜய் முரளி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், அவ்வப்போது கவுண்டமணி குறித்து இது மாதிரி புரளிகளை கிளப்பிவிடும் அந்த நல்ல மனிதர்கள் யார் என்று தெரியவில்லை. இதனால், அவர்களுக்கு என்ன பலன் என்றும் புரியவில்லை. சமீபத்தில்கூட புன்னகை அரசி கே.ஆர்.விஜயா குறித்து இதேபோல் வதந்திகளை பரப்பினார்கள். அவர் அறிக்கை தந்ததும் வதந்திகள் புஸ் ஆனது.
சற்று முன்புதான் அவரை சந்தித்தேன். உடல் நலம் ஆரோக்கியமாக இருக்கிறேன். புதிய படம் ஒன்றின் கதையை கேட்டுக் கொண்டிருக்கிறேன். விரைவில் நான் நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளிவரும். அந்தப் படத்தின் ஆரம்ப விழாவில் பத்திரிகையாளர்களை சந்திக்கிறேன் என்று கூறினார். இந்தியா முழுவதும் அவரது ரசிகர்கள் யாரும் பதட்டமடைய வேண்டாம். அவர் மிகவும் நலமாக இருக்கிறார் என்று கூறியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM