கிளிநொச்சி, முல்லைத்தீவு நன்னீர் மீன்பிடியாளர்களின் வாழ்வாதாரத்திற்கு நிதி ஒதுக்கீடு

Published By: Digital Desk 4

04 Oct, 2021 | 09:12 PM
image

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் நன்னீர் மீன்பிடியை வாழ்வாதாரமாக கொண்ட மக்களின் வாழ்வியலை வலுப்படுத்துவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் குறித்த இரண்டு மாவட்டங்களிலும் உள்ள நன்னீர் நிலைகள் தெரிவு செய்யப்பட்டு மீன் மற்றும் இறால் குஞ்சுகளை இடுகின்ற வேலைத் திட்டம் நக்டா எனப்படும் தேசிய நீரியல்வள அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அறிவுறுதலுக்கு அமைய 3 கோடி 22 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை முல்லைத்தீவு மாவட்டத்தில் 18 இலட்சம் 65 ஆயிரம் இறால் குஞ்சுகளும் சுமார் 2,281,314 மீன் குஞ்சுகளும் சுமார் 25 தெரிவு செய்யப்பட்ட நீர்நிலைகளில் இடப்பட்டுள்ளன.

அதேபோன்று, கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைமடு, அக்கராயன் உட்பட சுமார் 7 குளங்களிலும் பருவகால நீர்நிலைகளிலுமாக 12 இலட்சம் இறால் குஞ்சுகளும் 1,389,570 இலட்சம் மீன் குஞ்சுகளும் இடப்பட்டுள்ளன.

நக்டா நிறுவனத்தின் நிதி ஒதுக்கீட்டின் ஊடாக சுமார் 40 இலட்சம் இறால் குஞ்சுகள் மற்றும் சுமார் 58 இலட்சம் மீன் குஞ்சுகளை முல்லைத்தீவு மாவட்ட நன்னீர் நிலைகளிலும் 30 இலட்சம் இறால் குஞ்சுகளையும் 50 இலட்சம் மீன் குஞ்சுகளையும் கிளிநொச்சி மாவட்ட நன்னீர் நிலைகளில் இவ்வருடம் இடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

எஞ்சிய இறால் மற்றும் மீன் குஞ்சுகளை எதிர்வரும் வாரங்களில் தெரிவு செய்யப்பட்ட நீர்நிலைகளில் இடுவதற்கான நடவடிக்கைகளை நக்டா நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது.

இதன்மூலம் முல்லைத்தீவு மாவட்டத்தில் 1000 குடும்பங்களும் கிளிநொச்சி மாவட்டத்தினை சேர்ந்த சுமார் 700 குடும்பங்களும் நன்மையடையவுள்ளமை குறிப்பிடதக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31