(நா.தனுஜா)
ஐக்கிய மக்கள் சக்தி ஐந்தாகப் பிளவுபட்டுள்ளதாக சில ஊடகங்கள் பொய்யான செய்திகளை வெளியிட்டுள்ளன. ஆனால் உண்மையில் எமது கட்சியில் புதிதாக 25 பேர் இணைந்துகொள்ளவிருப்பதுடன் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஒருமைப்பாட்டுடன் செயற்பட்டுவருகின்றார்கள்.
அவ்வாறிருக்கையில் சில ஊடகங்கள் தமக்குரிய ஊடகதர்மத்தையும் சமூகப்பொறுப்பையும் மறந்து, 'அரசியல் ரீதியிலான ஊடக விபச்சாரத்தில்' ஈடுபட்டுவருகின்றன என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார கடுமையாகச் சாடியுள்ளார்.
அதுமாத்திரமன்றி ஊடகங்கள் இவ்வாறான பொய்யான செய்திகளை வெளியிடுவதை உடனடியாக நிறுத்திக்கொள்வதுடன் ஜனநாயகத்தை வலுப்படுத்தக்கூடிய வகையில் சுயாதீனத்தன்மையுடன் செயற்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக்காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM