இந்திய அரசாங்கத்தின் நிதி பங்களிப்புடன் மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்ட 1235 வீடுகள் இன்று பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன. கொவிட் - 19 தொற்று நிலைமையால் நிகழ்நிலை தொழில்நுட்பம் ஊடாகவே இதற்கான நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதன்படி பிரதான நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலின் கீழ், இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் தலைமையில் அலரிமாளிகையில் நடைபெற்றது.
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட அமைச்சர்களும், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் இந்திய தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோர் பிரதான நிகழ்வில் பங்கேற்றனர்.
இதன்போது இந்தியாவால் முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் பற்றி காணொளி ஒளிபரப்பபட்டது. பிரமுகர்களின் உரைகளைத்தொடர்ந்து நிகழ்நிலை தொழில்நுட்பம் ஊடாக திறப்பு விழா இடம்பெற்றது.
இதன்பிரகாரம் காலி மாவட்டத்தில் 50 வீடுகளும், பதுளை மாவட்டத்தில் 479 வீடுகளும், கண்டி மாவட்டத்தில் 184 வீடுகளும், ஹட்டன் மற்றும் பொகவந்தலாவ ஆகிய பகுதிகளில் 155 வீடுகளும், நுவரெலியா, அக்கரப்பத்தனை பகுதியில் 267 வீடுகளும் இவ்வாறு திறந்துவைக்கப்பட்டன.
மேற்படி பகுதிகளில் இருந்த இ.தொ.கா. பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் ஊடாக வீடுகளுக்குரிய ஆவணங்கள், பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.
அதேவேளை, இந்திய அரசின் நிதி பங்களிப்புடன் புசல்லாவை சரஸ்வதி கல்லூரியில் அமைக்கப்பட்ட கட்டிடமும் திறந்து வைக்கப்பட்டது.
அந்தவகையில் நுவரெலியா - இராகலை லிடேஸ்டேல் தோட்ட பிரிவான டியநிலை மேல் பிரிவு தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட 166 வீடுகள் கொண்ட இவ் வீட்டு திட்டத்திற்கான பெயர் பலகை இன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டு பயனாளிகளுக்கு வீடுகளும் உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்டன.
இதற்கான ஏற்பாடுகள் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது இராஜாங்க அமைச்சரின் வழிகாட்டலுக்கு அமைய நிகழ்வினை சிறப்பித்த இ.தொ.கா தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி பி.ராஜதுரை, முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் எ.பிலிப், நுவரெலியா பிரதேச சபை தவிசாளர் வேலு யோகராஜ், இளைஞர் அணி பொது செயலாளர் அர்ஜுன் ஜெயராஜ்,பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதிய அதிகாரிகள் மற்றும் யு.என்.எபிடாட் நிறுவன பணிப்பாளர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு பெயர் பலகை திரை நீக்கம் செய்து வைத்ததுடன் இவ் வீடுகள் உத்தியோகப்பூர்வமாக மக்களுக்கு கையளிக்கப்பட்டன.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் டியநிலை தோட்டத்தில் இந்திய நிதியுதவியுடன் யூ.என்.எபிடாட் நிறுவனம் குறித்த 166 வீடுகளின் கட்டுமான பணிகளை முன்னெடுத்திருந்தனர்.
இவ் உட்கட்டமைப்பு பணிகளை விரைவாக முன்னெடுக்க பெருந்தோட்ட வீடமைப்பு மற்றும் சமூதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் 26.6 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கியிருந்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM