சட்டத்துக்கு விரோதமாக வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் பினாமி சொத்துகள் வாங்கிக் குவித்த பிரபலங்களின் பெயர்களை பண்டோரா ஆவணங்கள் வெளிப்படுத்தியுள்ளன. 300 அதிகமான உலகின் முக்கிய பிரமுகர்கள் அதிகாரிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும் 90 நாடுகளின் முக்கிஸ்தர்களின் பாரிய மோசடிகள் குறித்து வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் முக்கிய வட்டாரத்தின் முக்கிய உறுப்பினர்கள், அமைச்சரவை அமைச்சர்கள், அவர்களது குடும்பங்கள் மற்றும் முக்கிய நிதி ஆதரவாளர்கள் உட்பட இரகசியமாக பல மில்லியன் டொலர் சொத்துக்களை வைத்திருக்கும் நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகளை குறித்து தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
இம்ரான் கானின் நிதி அமைச்சர் ஷாக்கத் ஃபயாஸ் அகமது மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் முன்னாள் நிதி மற்றும் வருமான ஆலோசகர் வக்கார் மசூத் கான் ஆகியோரின் சொத்துக்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த வெளிப்பாடுகள் பண்டோரா ஆவணங்களில் பகுதியாகும். 14 வெளிநாட்டு சேவை நிறுவனங்களின் 11.9 மில்லியனுக்கும் அதிகமான இரகசியக் கோப்புகளை அடிப்படையாகக் கொண்டு சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு உலகம் முழுவதும் 150 செய்தி நிறுவனங்களுடன் பகிர்ந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM