(எம்.மனோசித்ரா)
கொவிட் தொற்றுக்குள்ளாகும் தொற்றாளர்களுக்கிடையில் சில நீண்ட கால நோய் அறிகுறிகள் இனங்காணப்படுவதாக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு மற்றும் ஒவ்வாமை பிரிவின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டு இதனைத் தெரிவித்துள்ள அவர் அந்த பதிவில் மேலும் தெரிவித்துள்ளதாவது :
கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு இடையில் 3 மாதங்கள் முதல் 6 மாதங்கள் வரையான காலப் பகுதிக்குள் ஏற்படும் 9 விதமான நீண்ட கால நோய் அறிகுறிகள் இனங்காணப்பட்டுள்ளன.
அதற்கமைய சுவாசிப்பதில் சிரமத்திற்குள்ளாகுதல் , வயிற்று வலி, மன அழுத்தம், நெஞ்சு மற்றும் தொண்டை வலி, ஞாபக பிரச்சினைகள், சோர்வு, தலைவலி, தசை வலி உள்ளிட்ட நோய் அறிகுறிகளே இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளன.
இந்த நோய் அறிகுறிகளில் மனஅழுத்தமானது 15 வீதத்தால் அதிகரித்துள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது. ஏனைய அறிகுறிகள் சுவாசிப்பதில் சிரமம் 8%, வயிற்று வலி 8%,
மன அழுத்தம் 15%, நெஞ்சு மற்றும் தொண்டை வலி 6%, ஞாபக பிரச்சினைகள் 4%, சோர்வு 6%, தலைவலி 5%, தசை வலி 1.5 %, ஏனையவை 7% ஆகக் காணப்படுகிறது.
இந்த நோய் அறிகுறிகளுக்கு உள்ளாவோரில் பெரும்பாலானோர் பெண் ஆவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM