குடந்தையான்
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின்பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களுக்கு நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலில்,அவர் தலைமையிலான தி.மு.க. அரசிற்கு மக்களின் ஆதரவு முழுமையாக கிடைக்குமா? கிடைக்காதா?என்பது தான் தமிழக அரசியல் களத்தின் தற்போதைய பேசுபொருள்.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்டஒன்பது மாவட்டங்களில் ஒக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய திகதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரகஉள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.
இதில் தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெறும் என்றுஒரு பிரிவினரும், இந்த தேர்தலில் தில்லு முல்லு, முறைகேடு, அதிகார துஷ்பிரயோகம் போன்றவற்றைசெய்துதான் தி.மு.க. வெற்றிபெறும் என்று பிறிதொரு பிரிவினரும் தேர்தல் ஆரூடத்தை வெளியிட்டிருக்கின்றார்கள்.
ஆனால் ஊரக உள்ளாட்சி தேர்தலில்கட்சி செல்வாக்கு, கட்சித் தலைமையின் செல்வாக்கு ஆகியவற்றை முதன்மைப்படுத்தி பதிவாகும்வாக்குகளை விட, வேட்பாளராக நிற்கும் ஒருவரை மக்கள் அவதானித்து வாக்களிக்கும் ஒரே தேர்தல்இதுதான் என்பதால், இந்த தேர்தலில் கட்சியின் செல்வாக்கை விட தனிப்பட்ட நபரின் செல்வாக்கும்மக்களால் போற்றப்படும் என்பதே யதார்த்தமாகவுள்ளது.
கடந்த 2001ஆம் ஆண்டில் பிறகு தமிழகத்தில்உள்ளாட்சித் தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை. மேலும் உள்ளாட்சி அமைப்புகளும் சுதந்திரமாகசெயல்படமுடியாத நிலையும், உள்ளூர் தேவைகளை நடைமுறைப்படுத்துவதற்கு உரிய நிதி ஆதாரங்களையும்அரசாங்கம் இடை புகுந்து தடுத்து நிறுத்தியது. உள்ளாட்சிக்கான அதிகாரங்கள் படிப்படியாககுறைக்கப்பட்டன.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-10-03#page-8
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM