(எம்.மனோசித்ரா)
மட்டக்களப்பில் கணவவன் மனைவிக்கிடையில் ஏற்பட்ட முரண்பாட்டின்போது, மனைவியின் சகோதரனால் கிரிக்கட் மட்டையால் தாக்குதலுக்கு உள்ளான கணவன் உயிரிழந்துள்தாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது பலத்த காயமடைந்த நபர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே நேற்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.
காத்தான்குடி 3 பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் 25 வயதுடைய சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
செப்டெம்பர் 27 ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் 28 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் இம்மாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM