9 நிறுவனங்களின் உரிமையாளர் ஹுசைனின் மரணம் : இளைய மகன் அஸ்கரின் விளக்கமறியல் நீடிப்பு

02 Oct, 2021 | 07:28 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

அடம் எக்ஸ்போ உள்ளிட்ட 9 நிறுவனங்களின் உரிமையாளரான பிரபல வர்த்தகர் கபீர் அப்பாஸ் குலாம் ஹுசைனின் மரணம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவரது இளைய மகனின் விளக்கமறியல் எதிர்வரும் 8 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. 

கொழும்பு மேலதிக நீதிவான் காஞ்சனா நெரஞ்சலா டி சில்வா இவ்வாறு விளக்கமறியல் காலத்தை நேற்று நீடித்தார்.

பிரபல வர்த்தகரான அலி அஸ்கர் கபீர் குலாம் ஹுசைன் என்பவருடைய விளக்கமறியல் காலமே இவ்வாறு நீடிக்கப்பட்டது.

பிரபல வர்த்தகர் கபீர் அப்பாஸ் குலாம் ஹுசைனின்  மரணம் தொடர்பிலான நீதிவான் நீதிமன்ற விசாரணைகள் கொழும்பு மேலதிக நீதிவான் லோச்சனீ அபேவிக்ரம முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

இதன்போது, கடந்த தவணையில், சந்தேக நபரின் சட்டத்தரணியான ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ரதிஸ்ஸ முன் வைத்திருந்த வாதங்கள் தொடர்பில் பதிலளிக்க நேற்று சி.ஐ.டி. தவறியது.

பிரபல வர்த்தகர் கபீர் அப்பாஸ் குலாம் ஹுசைனை கொலை செய்ய சந்தேக நபரான அவரது இளைய மகன்  தன்னுடன் இணைந்து சதி செய்ததாக ஒருவர் சி.ஐ.டி.க்கு வாக்கு மூலம் அளித்துள்ள நிலையில்,  அவ்வாறு வாக்கு மூலம் வழங்கியவரை சாட்சியாக சி.ஐ.டி. பெயரிட்டுள்ள நிலையில், அவர் சந்தேக நபராக மன்றில் ஆஜர்செய்யப்படவேண்டியவர் என ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ரதிஸ்ஸ வாதம் செய்திருந்தார்.

இந் நிலையில், குறித்த நபரின் முழுமையான சாட்சியத்தை மன்றில்  சமர்ப்பிக்க நீதிமன்றம் கடந்த தவணையில் உத்தரவிட்டிருந்த போதும், நேற்று அது சமர்ப்பிக்கப்படவில்லை. 

இந் நிலையிலேயே எதிர்வரும் 8 ஆம் திகதி அதனை மன்றில் சமர்ப்பிக்க நீதிமன்றம் சி.ஐ.டி.க்கு உத்தரவிட்டது. அதன்படி அதுவரை சந்தேக நபரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டது.

முன்னதாக சி.ஐ.டி.யின் பொது மக்கள் முறைப்பாட்டுப் பிரிவுக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சூட்சுமமான விசாரணையில் பிரபல வர்த்தகர் கபீர் அப்பாஸ் குலாம் ஹுசைனின் கொலை சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டு கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ  கடந்த செப்டம்பர் 12 ஆம் திகதி அறிவித்திருந்தார்.  

குறித்த வர்த்தகரின் மரணம் இயற்கையானது அல்ல, அது ஒரு கொலை என 2019 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட மூவர் கொண்ட விஷேட  விஷேட சட்ட வைத்திய நிபுணர்களின் பிரேத பரிசோதனையின் போது வெளிப்படுத்தப்பட்ட நிலையில்  சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ மேலும் கூறினார்.

இதனையடுத்தே கோட்டே வீதி, எதுல் கோட்டே எனும் முகவரியைச் சேர்ந்த 37 வயதான சந்தேக நபர், விசாரணையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள விடயங்களை மையப்படுத்தி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அது முதல் விளக்கமரியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2017 ஜூன் மாதம் 9 ஆம் திகதி பிரபல வர்த்தகர் கபீர் அப்பாஸ் குலாம் ஹுசைன் அவரது அலுவலகத்தில் உயிரிழந்திருந்தார். அப்போது மாரடைப்பு காரணமாக அவர் இயற்கையாக உயிரிழ்ந்ததாக கூறி அவரது சடலம், இறுதிக் கிரியைகளின் பின்னர் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந் நிலையில் 2018  அகஸ்ட் 16 ஆம் திகதி குறித்த மரணத்தில் சந்தேகம் உள்ளதாக சி.ஐ.டி. யின்  பொதுமக்கள் முறைப்பாட்டு பிரிவுக்கு முறைப்பாடொன்று கிடைக்கப் பெற்றுள்ளது.

 இது தொடர்பில் சி.ஐ.டி. பணிப்பாளரின் நேரடி கட்டுப்படடில் விசாரணைகள் இடம்பெற்றன.

இவ்வாறான பின்னணியில் சி.ஐ.டி.யின் அறிக்கை பிரகாரம், 2019 ஆம் ஆண்டு குறித்த வர்த்தகரின் சடலம் மீள தோண்டி எடுக்கப்பட்டு மூவர் கொண்ட விஷேட சட்ட வைத்திய நிபுணர்கள் ஊடாக பிரேத பரிசோதனை நடாத்தப்பட்டுள்ளது.

 அவர்களது அறிக்கை பிரகாரம்,  தாடையில் வெடிப்பு, இடது விலா எலும்பில் முறிவு  உள்ளிட்டவை அவதானிக்கப்பாட்டுள்ளது. அத்துடன் கழுத்து நெரிக்கப்பட்டு மூன்றாவது நபர் ஒருவரால் செய்யப்பட்ட கொலை எனவும் இந்த பிரேத பரிசோதனைகளில் விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

இந் நிலையிலேயே சி.ஐ.டி.யின் சிறப்புக் குழு முன்னெடுத்த சூட்சும விசாரணைகளின் பின்னர், மரணித்த வர்த்தகரின் இளைய மகனை சந்தேகத்தில் கைதுசெய்துள்ளனர்.

 சொத்துக்களை தனதுடமையாக்கிக்கொள்ளும் நோக்கில் இந்த படுகொலை இடம்பெற்றுள்ளதாக சி.ஐ.டி.யினர் சந்தேகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30