தென்கிழக்கு ஆபிரிக்க நாடான மலாவியில் முன்னாள் துணை சபாநாயகர் பாராளுமன்ற வளாகத்தில் வைத்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
மாற்றுத்திறனாளியான 50 வயதுடைய செல்மென்ட் ஷிவாலா என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
இவர் தனது பதவிக்காலம் முடிவடையும் சமயத்தில் சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். வாங்கிய சில மாதங்களில் அந்த கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதனால், விபத்துக்குள்ளான காரை சீர் செய்வதற்கான செலவை பாராளுமன்றம் தரவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துவந்தார்.
ஆனால், அந்த சமயத்தில் காருக்கான இழப்பீட்டை அவர் புதிப்பிக்காததால் அது காலாவதியானது. இதனால், காருக்கான செலவை ஏற்கமுடியாது என்று செல்மெண்ட் ஷிவாலாவின் கோரிக்கையை பாராளுமன்றம் நிராகரித்தது.
இந்நிலையில், பாராளுமன்ற வளாகத்திற்கு நேற்று சக்கர நாற்காலியில் வருகை தந்த செல்மென்ட் ஷிவாலா, தனது காரை சீர்செய்வதற்கான செலவை பாராளுமன்றம் ஏற்காததால் மனவேதனை அடைந்து தான் மறைத்து கொண்டுவந்த துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்த சம்பவம் பாராளுமன்றத்தில் இருந்த உறுப்பினர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM