(எம்.மனோசித்ரா)
வத்தளை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 550 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பேலியாகொட குற்ற விசாரணை பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைவாகவே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைதான சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு இணங்க கஞ்சா போதைப்பொருளுடன் மேலும் இரு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் தெலஹபாத பிரதேசத்தில் 8 கிலோ 699 கிராம் கஞ்சா மற்றும் கஞ்சா விற்பனை மூலம் பெற்றுக் கொண்ட 71 000 ரூபா பணம் என்பவற்றுடன் மேலும் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களும் 40 - 25 வயதுக்கு இடைப்பட்ட வத்தளை, மாபொல மற்றும் பேலியகொட பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM