பைஸர் தடுப்பூசி போடும் பணிகள் தொடர்ந்து இடம்பெறும் - சீமாட்டி சிறுவர் போதனா வைத்தியசாலை

Published By: Gayathri

30 Sep, 2021 | 05:26 PM
image

நாட்பட்ட மற்றும் விஷேட தேவையுடைய பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் கடந்த வெள்ளிக்கிழமை மேல்மாகாணத்தில் கொழும்பு மாவட்டத்தில் பொரளை சீமாட்டி சிறுவர் போதனா வைத்தியசாலையில் முதற்கட்டமாக ஆரம்பிக்கப்பட்டன. 

12 வயதிற்கும் 19 வயதிற்கும் இடைப்பட்ட மேற்படி  தேவையுடைய  பாடசாலை மாணவர்களுக்கே இந்த  பைஸர் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து இன்றுவரை சுமார்  700 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு  பைஸர் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விஷேட வைத்தியர்கள் அனுபவமுள்ள தாதியர்கள் மூலம் பூரணமான முறையில் மாணவர்களின் நோய்கள் உள்ளிட்ட அவர்களின் சகல விடயங்களும் அவர்களை அழைத்து வரும் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களிடமிருந்து  பெறப்பட்ட பின்னரே குறித்த மாணவர்களுக்கான தடுப்பூசி ஏற்றப்படுகின்றன.  

எனவே பெற்றோர்களும் பாதுகாவலர்களும் அஞ்சவோ அல்லது அச்சமடையவோ  தேவையில்லை  என சிறுவர் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்கள்  தெரிவிக்கின்றனர்.

கொழும்பில்  பெருமளவான மாணவர்களை அவர்களின் பெற்றோர் அழைத்து வந்து குறித்த தடுப்பூசியை போட்டுக் கொள்கின்றனர். 

குறிப்பாக வைத்தியர்களும் தாதியரும் குறித்த மாணவர்கள் விடயத்தில் அதீத அக்கறை செலுத்துவதுடன் அவர்களை சிறந்த முறையில் வரவேற்று அவர்களுக்கான ஆலோசனைகளை வழங்கி தடுப்பூசிகளை சிறப்பக போட்டு வருகின்றமையை அவதானிக்க முடிகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17