(எம்.மனோசித்ரா)
பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸாரால் நாட்டின் சில பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில் சட்ட விரோத மதுபானத்துடன் சந்தேகநபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் ராகமை பொலிஸ் பிரிவில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 330 லீற்றர் சட்டவிரோத மதுபானம், 1660 லீற்றர் கோடா, 5 சமையல் எரிவாயு சிலிண்டர்கள், எரிவாயு அடுப்பு என்பவற்றுடன் 25, 34 வயதுடைய ராகம பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோன்று கதிர்காமம் பொலிஸ் பிரிவில் கதிர்காமம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பில் 20 லீற்றர் சட்ட விரோத மதுபானத்துடன் 41 வயதுடைய தெடலமுவ பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வேயங்கொட பொலிஸ் பிரிவில் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பில் 67 லீற்றர் சட்ட விரோத மதுபானம் , 717 லீற்றர் கோடா என்பவற்றுடன் 50 வயதுடைய சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM