(இராஜதுர ஹஷான்)
அரிசியின் விற்பனை விலை தொடர்பில் தற்போது எழுந்துள்ள சர்ச்சைக்கு அரசாங்கம் உரிய தீர்வை வழங்க வேண்டும். அரிசிக்கான நிர்ணய விலை இரத்து செய்யப்பட்டுள்ளமை அரிசி மாபியாக்களுக்கு சாதகமாக அமையும்.
நுகர்வோரின் நலன்குறித்து அரசாங்கம் அக்கறை கொள்ளவில்லை என நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் தேசிய அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே குற்றஞ்சாட்டினார்.
அரிசியின் நிர்ணய விலை இரத்து செய்யப்பட்டுள்ளமை குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டை ஆள்வது பிரதான அரிசி உற்பத்தி உரிமையாளர்களா அல்லது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கமா என்ற சந்தேகம் எழுகிறது. அத்திhவசிய பொருட்களின் விலை நிர்ணயத்தில் வியாபாரிகளும், இறக்குமதியாளரர்களும் ஆதிக்கமுடையவர்களாக உள்ளார்கள்.
அத்தியாவசிய பொருட்கள் பதுக்கல், சந்தையில் அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு, பின்னர்பொருட்கள் கைப்பற்றல், வியாபாரிகளின் நோக்கத்திற்கு அமைய பொருட்களின் விலை அதிகரிப்பு ஆகியவை அத்தியாவசிய பொருட்கள் தொடர்பில் அரசாங்கம் கையாளும் தற்போதைய சூத்திரமாக காணப்படுகிறது. அரசாங்கத்தின் தீர்மானத்தினால் நுகர்வோர் பாதிக்கப்படுகிறார்கள், வியாபாரிகள் நன்மையடைகிறார்கள் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM