(எம்.மனோசித்ரா)
மியன்மாரில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்துதல் உட்பட நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டுவர முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து இலங்கைக்கான மியன்மார் தூதுவர் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிடம் தெளிவுபடுத்தியுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான மியன்மார் தூதுவர் யு ஹான் து மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய இந்த சந்திப்பின்போது மியன்மாரின் தற்போதைய அரசியல் நிலைவரம் மற்றும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்துதல் உட்பட நாட்டில் இயல்பு நிலைக்கு கொண்டுவர முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து அமைச்சருக்கு விளக்கினார்.
இரு நாடுகளுக்கிடையிலான வரலாற்றுத் தொடர்புகள் நினைவு கூரப்பட்ட அதேவேளை, இலங்கை மற்றும் மியன்மாருக்கு இடையேயான நெருங்கிய இருதரப்பு ஒத்துழைப்பின் முக்கிய தூண்கள் பௌத்தமும் கலாச்சாரமுமாகும் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.
மியன்மார் மக்களின் முன்னேற்றத்திற்கும் செழிப்பிற்கும் அவை அவசியமாதலால், மியன்மாரிலுள்ள அனைத்தையும் உள்ளடங்கிய ஜனநாயகக் கட்டமைப்பிற்குள் இலங்கையின் சமூக மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையை அது வலுவாக ஆதரிப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டதாகவும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM