தேர்தல் நியாயமன்றம் புதிதாக அமைக்கப்பட வேண்டும் -பாராளுமன்ற விசேட குழுவில் பரிந்துரைத்த தேர்தல்கள் ஆணைக்குழு

Published By: Vishnu

30 Sep, 2021 | 12:48 PM
image

அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கு புதிய வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா, தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவில் நேற்று (29) தெரிவித்தார். 

May be an image of 2 people, people sitting, people standing and indoor

சில அரசியல் கட்சிகள் மாவட்டத்துடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில் அரசியல் கட்சிகளைப் பதிவுசெய்வதற்கான அளவுகோல்களில் குறைபாடுகள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தேசிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகள், பதிவு செய்யப்பட்ட கட்சிகள் மற்றும் பிராந்திய கட்சிகள் என்ற ரீதியில் அரசியல் கட்சிகளை வகைப்படுத்தி, அவற்றைப் பதிவுசெய்வதற்கான திட்டமொன்று உருவாக்கப்பட வேண்டும் என்றும் நிமல் புஞ்சிஹேவா, விசேட குழு முன்னிலையில் தெரிவித்தார். 

பாராளுமன்ற விசேட குழு அதன் தலைவர் சபை முதல்வர், அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தலைமையில் பாராளுமன்றத்தில் நேற்று கூடியது.

May be an image of 1 person, sitting, standing, indoor and text that says '©Parliament of Sri Lanka'

வேட்புமனுக்களைக் கையளிக்கும்போது ஏற்படுகின்ற தொழில்நுட்ப ரீதியான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஆகக் குறைந்தது 24 மணித்தியால கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு இங்கு தெரிவித்தது.

சுயேச்சைக் குழுக்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பணம், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும் நீடிக்கப்பட வேண்டும் என்பதும் ஆணைக்குழுவின் நிலைப்பாடாக இருந்தது. கட்டுப்பணம் செலுத்தும் நடைமுறை காலத்துக்கு ஏற்ற வகையில் திருத்தப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுக்களை விநியோகிக்கும் நடவடிக்கை தபால் திணைக்களத்தினால் மாத்திரம் முன்னெடுக்கப்படுவதுடன், இதற்கு மாற்றீடான நடவடிக்கையைப் பயன்படுத்துவதன் அவசியத்தையும் தேர்தல்கள் ஆணைக்குழு இங்கு குறிப்பிட்டது.

தேர்தலொன்றின் போது வாக்குகளிக்கும் நேரமானது, வாக்களிப்பு முடிவடையும்போது வரிசையில் நிற்கும் வாக்காளர்களும் தமது வாக்குகளைப் பயன்படுத்தக் கூடிய வகையில் தேர்தல் சட்டங்கள் திருத்தப்பட வேண்டும் என்றும் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

”கலப்பு விகிதாசார தேர்தல் முறை நாட்டுக்குப் பொருத்தமானது என்பதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் நிலைப்பாடு” என்றும் அதன் தலைவர் நிமல் புஞ்சிஹேவா, பாராளுமன்ற விசேட குழுவில் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 225ஆகப் பேணப்பட வேண்டும் என்றும், இதில் 140 பேர் தொகுதிவாரி முறையிலும், 70 பேர் மாவட்ட விகிதாசார முறையிலும், 15 பேர் தேசியப் பட்டியல் ஊடாகவும் தெரிவுசெய்யப்பட வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.

வேட்புமனுத் தாக்கல் செய்யும் நடவடிக்கை முடிவடைந்ததும் வேட்பாளர்கள் தபால் மூல வாக்கைப் பயன்படுத்த வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், சுகாதாரம் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு தாபால்மூல வாக்குகளைப் பயன்படுத்த வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் இங்கு தெரிவித்தார்.

முற்கூட்டியே வாக்குகளை அளிப்பதற்கான உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும். இதற்காக விசேடமான வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும் என்பதும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் நிலைப்பாடாக இருந்தது.

மக்கள் பிரதிநிதிகளை மீள அழைத்துக் கொள்வதற்கான பொறிமுறை இருக்க வேண்டும் என்றும், இதற்குப் பொருத்தமான பொறிமுறையொன்று தயாரிக்கப்பட வேண்டும் என்றும் ஆணைக்குழு தெரிவித்தது.

புதிய திருத்தங்களின்போது இரட்டை வாக்குச் சீட்டுக்களைப் பயன்படுத்துவது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், தேர்தல் குற்றங்கள் குறித்து வழக்குத் தாக்கல் செய்யும் உரிமை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் நிமல் புஞ்சிஹேவா அவர்கள் பாராளுமன்ற விசேட குழுவில் சுட்டிக்காட்டினார். தேர்தல்களுக்கான நியாயமன்றம் புதிதாக அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் இங்கு குறிப்பிட்டார்.

தேர்தல் செலவுகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் ஆணைக்குழு உறுதியான நிலைப்பாட்டில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.  இந்த செலவுகளைக் கட்டுப்படுத்த விருப்பு வாக்குமுறை இரத்துச் செய்யப்பட வேண்டும் என அமைச்சர் நிமல் சிறிபால.டி.சில்வா குழுவில் குறிப்பிட்டார்.

20வது அரசியல் திருத்தத்தின் பின்னர் ஊடகங்களுக்கான அளவுகோல்கள் அரசாங்க ஊடகங்களுடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்படாது தனியார் ஊடகங்களுக்கும் அவற்றைப் பயன்படுத்த முடியும் என்றும் நிமல் புஞ்சிஹோவா தெரிவித்தார்.

மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்துவது தொடர்பிலும் பாராளுமன்ற விசேட குழுவில் கலந்துரையாடப்பட்டது. சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் இது தொடர்பில் கருத்துத் தெரிவித்தனர்.

பாராளுமன்ற விசேட குழுவின் கூட்டத்தில் அமைச்சர்களான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், பாராளுமன்ற உறுப்பினர்களான ரவுப் ஹக்கீம், ரஞ்சித் மத்தும பண்டார, மனோ கணேசன், எம்.ஏ.சுமந்திரன், மதுர விதானகே, சாகர காரியவசம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51