(எம்.மனோசித்ரா)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களில் பெருமளவானோர் தமது தொழிற்சாலைகளை நிர்வகித்து வரும் வத்தளை, கெரவலப்பிட்டி தொழிற்ட்பேட்டை வீதி அபிவிருத்தி பணிகளை துரிதப்படுத்தி விரைவில் நிறைவு செய்யுமாறு கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
முறையான வடிகால் அமைப்புகள், தெரு விளக்குகள், நடைபாதைகள், சைக்கிள் பாதைகள், நான்கு சுற்றுவட்டங்கள் மற்றும் அழகான வீதியில் மரங்களை நடுதல் உள்ளிட்ட முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையிலான வீதி அமைப்பு உருவாக்கப்படும்.
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நேரடி தொழிலாளர் பங்களிப்புடன் அபிவிருத்தி செய்யப்படும் இந்த வீதியின் ஆரம்ப கட்டத்திற்கு 123 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
முதலீட்டாளர்களை ஊக்குவிக்க உட்கட்டமைப்பு மேம்பாடு மிகவும் முக்கியமானது என்பதால் அதனுடன் தொடர்புடைய வீதி அமைப்புகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா மேலும் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM