மனுஷவை சி.ஐ.டி.க்கு அழைத்து உண்மை பிரச்சினைகளை மறைக்கும் திட்டத்தில் அரசாங்கம் - சஜித் குற்றச்சாட்டு

Published By: Vishnu

30 Sep, 2021 | 11:57 AM
image

பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரவை குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வரவழைத்து உண்மையான பிரச்சினைகளை மறைக்கும் திட்டத்தில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்தும் ஊடகவியலாளர்கள் மற்றும் பத்திரிகை ஆசிரியர்களை வரவழைக்கும் அரசாங்கம் அத்தகைய பொது பிரதிநிதிகளை சி.ஐ.டி.க்கு அழைப்பதில் ஆச்சரியமில்லை என்று அவர் கூறினார்.

தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் தரவுகள் அழிக்கப்பட்டமை விவகாரம் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரவினால் தெரிவிக்கப்பட்ட கருத்து தொடர்பில் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தினால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமையவே அவர்  குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜரமாகுமாறு மனுஷ நாணயக்கார அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் அது தொடர்பான விசாரணைக்காக மனுஷ நாணயக்கார இன்று காலை சி.ஐ.டி.யில் ஆஜராகும்வேளையில் அவருடன் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் சி.ஐ.டி.க்கு சென்றிருந்தனர்.

இதன்போதே ஊடகவியலாளர்கள் முன்னிலையில் மேற்கண்ட கருத்தினை தெரிவித்த சஜித் பிரேமதாச, 

மக்களுக்கு தடுப்பூசி போடுவது மற்றும் அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வது போன்ற அறிவியல் விடயங்களில் கட்டுக்கதையின் பின்னால் இருந்த அரசாங்கம், நாட்டில் பொய்களையும் வஞ்சகங்களையும் பரப்பியது என்றார். 

சட்டமா அதிபர் திணைக்களத்தின் கருத்து, தரவை அழிக்கும் செயல்முறைக்குப் பின்னால் போதைப்பொருள் மாஃபியா இருப்பதாகவும், அவர்கள் வெளியிட்ட வெளிப்பாடுகள் மிகவும் தீவிரமானவை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

மேலும் தேசிய பாதுகாப்பு ஒரு பெரிய பிரச்சினை என்றும் பொய்யான வதந்திகளை முன்வைத்து மக்களை தவறாக வழிநடத்தி குழப்பமடையச் செய்வது பொறுப்பான அரசு அல்ல.

ஊடகங்களை ஒடுக்குதல், பொது ஊழியர்களை ஒடுக்குதல், மனித சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை மீறுவதன் மூலம் ஒரு நாடு முன்னேற முடியாது.

தற்போதைய அரசாங்கம் இந்த நாட்டிற்கு ஒரு துரதிர்ஷ்டவசமான விதியை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08