(எம்.எம்.சில்வெஸ்டர்)
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடத்தப்படும் கால்பந்தாட்ட உலகக் கிண்ணப் போட்டியை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடத்துவதற்கான யோசனை மற்றும் கால்பந்தாட்ட போட்டி அட்டவணை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் முடிவுகள் எடுப்பது சம்பந்தமான தீர்மானமிக்க கூட்டமொன்றை நாளைய தினம் (30) சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் (பீபா) நடத்தவுள்ளது.
ஒன்லைன் ஊடாக நடத்தப்படும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு பீபாவில் அங்கம்வகிக்கும் சகல நாட்டினதும் கால்பந்தாட்ட சம்மேளன நிர்வாகத்தினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கால்பந்தாட்ட நாட்காட்டியில் போட்டிகளை மேலும் அதிகரிக்கச் செய்து மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமென அநேகமான நாடுகள் எதிர்பார்த்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை கால்பந்தாட்ட உலகக் கிண்ணம் நடத்தப்பட வேண்டும் என்ற விடயம் காலத்துக்கு காலம் கூறப்பட்டு வந்திருப்பினும் தற்போது இது தொடர்பிலான தனது பார்வையை பீபா மீண்டும் செலுத்தியுள்ளது.
எனினும்,இவ்விடயம் தொடர்பில் எதிரான கருத்தை வெளியிட்டுள்ள ஐரோப்பிய கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் அலெக்ஸாண்டர் செனரொன், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்தை நடத்துவது சரியான செயல்பாடல்ல எனவும், ஐரோப்பியர்கள் அதனை தடை செய்வதாகவும் கூறியிருந்தார்.
எவ்வாறாயினும், கால்பந்தாட்ட ரசிகர்களின் ஒரு சாரார் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்தை நடத்தினால், கால்பந்தாட்டப் போட்டிகளை தொடர்ந்தும் கண்டுகளிக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM