(எம்.மனோசித்ரா)
டொலர் நெருக்கடியின் காரணமாக துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய 800 கொள்கலன்களை விடுவிப்பதற்காக இறக்குமதி நிறுவனங்களின் கோரிக்கைக்கு அமைய அரசாங்கத்தினால் 50 மில்லியன் டொலர் ஒதுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.
வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று செவ்வாய்கிழமை நடைபெற்றபோது இதனைத் தெரிவித்த அவர் ,
உள்நாட்டு சந்தையில் சில அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இது தொடர்பில் பிரதமர் தலைமையில் நடைபெற்ற வாழ்க்கைச் செலவு கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டது.
இதன்போது டொலர் நெருக்கடியின் காரணமாக சுமார் 800 அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிக்க முடியாமலுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவிக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டது.
அதற்கமைய குறித்த 800 கொள்கலன்களை விடுவிப்பதற்கு அரசாங்கத்தினால் 50 மில்லியன் டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய விரைவில் அவற்றை விடுவிப்பதற்கும் துறைமுக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். துறைமுகத்தில் சட்ட ரீதியான மற்றும் சட்ட ரீதியற்ற என்ற இரு வகை கொள்கலன்கள் உள்ளன.
அவற்றில் சட்ட ரீதியாக கொண்டு வரப்பட்டுள்ள கொள்கலன்களை இறக்குமதி செய்வதற்காகவே 50 மில்லியன் டொலர் வழங்கப்படவுள்ளது.
அதேவேளை சட்டரீதியான கொள்கலன்களை அரசுடைமையாக்கி அவற்றிலுள்ள அத்தியாவசிய உணவு பொருட்களை சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM