(எம்.மனோசித்ரா)
நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபைக்கு காணப்படும் அதிகாரங்களுக்கமைய அரிசி விலையை நிர்ணயித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்வதற்கு திங்களன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனினும் நெல் கொள்வனவிற்கான நிர்ணய விலையில் எவ்வித மாற்றமும் இல்லை என்று நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகிவண்ண தெரிவித்தார்.
வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,
இறக்குமதி தடை மற்றும் நிர்ணயவிலை என்பவற்றை நீண்ட காலத்திற்கு நடைமுறைப்படுத்த முடியாது. பரந்த சந்தை வர்த்தக நடவடிக்கைகள் காணப்படுகின்ற சூழலில் தேவைக்கேற்ப மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும்.
வர்த்தக அமைச்சினால் மேற்கூறியவாறு ஒரு இலட்சம் அரிசி இறக்குமதிக்கான நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக வர்த்தகத்துறை அமைச்சு இந்தியா மற்றும் மியன்மார் தூதரகங்களுடன் தொடர்பாடல்களை மேற்கொண்டு நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM