சென்னை பொலிஸார் சிம்புவுக்கும் அனிருத்துக்கும் எதிரான ஆதாரங்களை தற்போது சேகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
சிம்பு, அனிருத் கூட்டணியில் வெளியான பீப் பாடல் கடந்த வாரம் இணையதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது குறித்து பொலிஸ் தரப்பில் கூறும்போது "பிரச்சினைக்குரிய ஆபாச பாடல் வெளியான விவகாரத்தில், சம்பந்தப்பட்ட நடிகர் சிம்பு அதனை நான் வெளியிடவில்லை என்று கூறியிருக்கிறார்.
யூடியூப் மூலமாகவே அந்த பாடல் வெளியில் வந்துள்ளது. அப்படியென்றால் சிம்பு பாடி இருப்பதாக கூறப்படும் பாடலை வெளியிட்டவர் யார்? என்பதை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம். அந்த நபர் பிடிபட்டால் அவர் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணைக்கு செல்வோம்.
சர்ச்சைக்குரிய பாடலை சிம்புதான் பாடினாரா? என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும். இதற்காக ‘வாய்ஸ் டெஸ்ட்' என்று அழைக்கப்படும் குரல் பரிசோதனையும் நடத்தப்பட வேண்டியுள்ளது. இந்த சோதனையை தடயவியல் நிபுணர்களே நடத்துவார்கள். அவர்கள் சிம்புவை வரவழைத்து சம்பந்தப்பட்ட பாடல் வரிகளை பாடச்சொல்லி அதனை பதிவு செய்து வைத்துக் கொள்வார்கள். பின்னர் இணையதளத்தில் வெளியான பாடலுடன் அதனை ஒப்பிட்டு பார்த்து இரண்டுக்கும் ஒரே குரல் தானா? என்பதை ஆய்வு செய்வார்கள்.
இப்படி திரட்டப்படும் ஆதாரங்களின் உண்மை தன்மையை வைத்தே சிம்புவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும். அதற்காகத்தான் காத்திருக்கிறோம்". என்று சென்னை பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM