சுய தொழிலாளர்களின் சங்கம் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

Published By: Digital Desk 3

28 Sep, 2021 | 09:53 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

தனிமைப்படுத்தல் சட்டத்துக்கு முரணாக மதுபான விற்பனை நிலையங்களை திறக்க அனுமதி வழங்க முடியுமானால்,  தமது சங்கத்தின் உறுப்பினர்களுக்கும்   வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட  அனுமதியளிக்க அரசாங்கத்துக்கு உத்தரவிடுமாறு கோரி சுய தொழிலாளர்களின் சங்கம் உயர் நீதிமன்றில்  அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்துள்ளது. குறித்த மனு மீதான பரிசீலனைகளை உயர் நீதிமன்றம்  எதிர்வரும் ஒக்டோபர் 4 ஆம் திக்திக்கு நேற்று ஒத்தி வைத்தது.

ஐக்கிய தேசிய சுய தொழிலாளர்களின் சங்கத்தின் தலைவர் பி.ஐ. சார்ல்ஸ், உப தலைவர் பி.ஜீ.பி. நிசங்க, செயலர் கிரிஷான் மாரம்பகே ஆகியோர்  இந்த மனுவை உயர் நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தனர்.

அம்மனுவில் பிரதிவாதிகளாக  சுகாதர சேவைகள் பணிப்பாளர் நாயகம், பொலிஸ் மா அதிபர், மது வரி திணைக்கள ஆணையாளர் உள்ளிட்ட 47 பேர் பெயரிடப்பட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே குறித்த மனு மீதான விசாரணைகள் நேற்று உயர் நீதிமன்றின்  நீதியரசர்களான எல்.டி.பி. தெஹிதெனிய, ஷிரான் குணரத்ன, மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் முன்னிலையில் ஆராயப்பட்டது.

இதன்போது, பிரதிவாதிகள் சார்பில் மன்றில் ஆஜரான அரச சட்டவாதி,  இவ்வழக்குடன் தொடர்புடைய ஆவணங்கள் கடந்த வெள்ளியன்று மாலையே தனக்கு கிடைத்த நிலையில், இவ்வழக்கில் பெரும் எண்ணிக்கையிலான பிரதிவாதிகள் இருப்பதால் அவர்களிடம் ஆலோசனைப் பெற கால அவகாசம் வேண்டும் என உயர் நீதிமன்றைக் கோரினார்.

இதன்போது, மனுதரர் சார்பில் மன்றில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி எராஜ் டி சில்வா,  பிரதிவாதிகளின் நடவடிக்கை காரணமாக தமது சேவை பெறுநரின் சங்கத்தை சேர்ந்த சுமார் 7,000 பேர் வரை பாதிக்கப்பட்டு தொழில் இன்றி இருப்பதாக கூறினார். அதனால் மனுவை பரிசீலினைக்கு எடுக்க கிட்டிய திகதியொன்றினை நிர்ணயம் செய்ய வேண்டும் என அவர் கோரினார்.

அதன்படி மனுவை எதிர்வரும் அக்டோபர் 4 ஆம் திகதி பரிசீலிக்க தீர்மானித்த உயர் நீதிமன்றம் , அதற்கு முன்னர் பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு மனுதாரர் தரப்பு சட்டத்தரணியை அறிவுறுத்தியது.

உயர் நீதிமன்றில் தக்கல் செய்யப்பட்டுள்ள குறித்த மனுவில்,  தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ், உரிய அதிகாரியான சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கடந்த ஆகஸ்ட் 20 ஆம் திகதி வெளியிட்ட அறிவித்தல் பிரகாரம் மதுபான சாலைகள் திறப்பது தடை செய்யப்பட்டுள்ளதாக  மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனினும் கடந்த 19 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் மதுபான சலைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான அனுமதியை தாங்கள் வழங்கவில்லை என சுகாதர சேவைகள் பணிப்பாளரும், மது வரித் திணைக்கள  பணிப்பாளர் நாயகமும் தெரிவித்துள்ள்னர்.

இந்நிலையில் பிரதிவாதிகளின் நடவடிக்கையால் தமது உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உத்தரவிடுமாறு மனுதாரர்கள் உயர் நீதிமன்றைக் கோரியுள்ளனர்.

அத்துடன் மதுபான விற்பனை நிலையங்களை தொடர்ந்தும் திறந்து வைக்க அனுமதிப்பதானால், தமது சங்க உறுப்பினர்களுக்கு வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடவும் அனுமதியளிக்க  அரசுக்கு உத்தரவிடுமாறும்   மனுதாரர்கள் கோரியுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55