மஸ்கெலியாவில் தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Published By: Digital Desk 4

27 Sep, 2021 | 10:13 PM
image

மஸ்கெலியா மரே தோட்டத்தின் 7 பிரிவுகளை சேர்ந்த தொழிலாளர்கள் இன்று 27.09.2021 தோட்ட தொழிற்சாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 100ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பதாதைகளை ஏந்திய வண்ணம், கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

மரே தோட்டத்தை சேர்ந்த போரஸ் பிரிவு, நல்லதண்ணி மேல்பிரிவு, கீழ்பிரிவு, வலதல பிரிவு, கெடஸ் பிரிவு, புதுக்காடு பிரிவு, ராஜ மலை பிரிவு ஆகிய பிரிவுகளை சேர்ந்தவர்களே இந்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

1000 ரூபா சம்பள அதிகரிப்பை தருவதாக கூறிய கம்பனிகள் தற்போது தம்மை ஏமாற்றியுள்ளதாகவும், முன்னர் நாளொன்றுக்கு 16 கிலோ பச்சை தேயிலையை பறித்து வந்த நிலையல் இன்று அது 20 கிலோவரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

தற்போது தேயிலை கொழுந்து விளைச்சல் இல்லாத நிலையில் தம்மால் 20 கிலோ பறிப்பது என்பது முடியாதுள்ளதோடு, தாம் தினசரி 7 தொடக்கம் 10 கிலோ தேயிலை கொழுந்தையே பறிக்கும் நிலையில் உள்ளோம்.

இதனால் கிலோவிற்கு ரூபா 50 படி தமக்கு தினக்கூலியாக ரூபா 350 தொடக்கம் ரூபா 500 வரை கிடைக்கப்பெறுகின்றது.

முன்னர் இந்த தேயிலை கொழுந்து பறித்தாலும், தமக்கு ரூபா 750 தினக்கூலியாக கிடைத்தது.

இவ்வாறான நிர்வாகங்களின் கெடுபிகளால் தாம் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேற்படி தோட்டங்களை பொறுப்பேற்றுள்ள நிர்வாகம் உரிய வகையில் செயற்படாததால் தோட்டங்கள் காடாகி வருகின்றன.

சிறுத்தை உட்பட விலங்குகள் பெருகியுள்ளன. இதனால் பெரும் அச்சதுடனேயே பணி செய்ய வேண்டியுள்ளது. மேலும், பெருந்தோட்டத்துறை அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அதேபோல தொழிலுக்கு செல்ல முடியாத நிலை காணப்படுகின்றது. உயிரை கையில் பிடித்துக்கொண்டே வேலைசெய்ய வேண்டிய அவலம் தொடர்கிறது.

தோட்ட நிர்வாகம் எந்தவித அடிப்படை வசதிகளையும் செய்துக்கொடுக்காமல் அடிமைகளைப் போல் நடத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது என மரே தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்விடயம் தொடர்பாக தோட்ட முகாமையாளர் வினவியபோது, இந்த பிரச்சினை தற்போது காணப்படுவதை அவர் ஏற்றுக்கொண்டார்.

மேலும், இந்த பிரச்சினை தமது தோட்டத்திற்கு மட்டுமன்று முழு பெருந்தோட்டத்துறைக்கும் உரியதாகவு காணப்படுகின்றது. தற்போதைய அதி கூடிய மழை விளைச்சலை இல்லாது செய்துள்ளதோடு, அரசின் கொள்கைக்கமைய இரசாயண உர பாவனையும் நிறுத்தப்பட்டுள்ளதால் தமக்கு தேயிலைக்கு இரசாயண உரத்தை பயன்படுத்த முடியாத நாளும் விளைச்சலில் வீழச்சி ஏற்பட்டுள்ளது.

இந்த நிலை நிவர்த்திப்பதற்காக தமது கம்பனியின் உயர்மட்டம் சில வேலைத்திட்டங்களை தற்பொது முன்னெடுத்துள்ளதோடு, அதற்கான பலன்களை எதிர்காலத்தில் பெற்றுக்கொடுப்போம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58