பால்மா, அரிசி, எரிவாயு, கோதுமை மா உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப்பொருட்கள் விலை அதிகரிக்கும் - ஆளுந்தரப்பு

Published By: Gayathri

26 Sep, 2021 | 06:02 PM
image

(ஆர்.யசி)

பால்மா, கோதுமை மா, சீனி, அரிசி, எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப்பொருட்கள் மற்றும் சீமெந்து, டயில்ஸ் உள்ளிட்ட பொருட்களின் விலையை அதிகரிக்குமாறு இறக்குமதியார்கள் வலியுறுத்தி வருகின்ற நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நாளை காலை கூடும் வாழ்கை செலவு பற்றிய அமைச்சரவை உபகுழுக்கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படுவதுடன் விலை அதிகரிப்பிற்கான  வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக ஆளுந்தரப்பு தெரிவிக்கின்றது.

கொவிட் 19 வைரஸ் பரவல் நிலைமைகளிலும், இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார மற்றும் கடன் நெருக்கடி நிலைமையை அடுத்தும் இறக்குமதி செய்யும் அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு நிலையொன்று ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் பொதுமக்கள் பக்கத்தில் இருந்து கடுமையான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டும் வருகின்றது. குறிப்பாக கடந்த மூன்று வாரங்களாக பால்மா தட்டுப்பாடு காணப்படுகின்ற நிலையில் குழந்தைகள் கஷ்டப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர். 

தேசிய பால்மா வகைகள் சந்தைக்கு விடப்படுகின்ற போதிலும் பால்மாவை பெற்றுக்கொள்ள வெவ்வேறு நிபந்தனைகள் வியாபாரிகளினால் விதிக்கப்படுவதாக மிகப்பெரிய குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகின்றது. 

நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை உள்ளிட்ட சிவில் அமைப்பினர் இந்த நிலைமைகளை அரச தரப்பிடம் தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்ற நிலையில் அரசாங்கமும் அழுத்தங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக அமைச்சர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நாளை அமைச்சரவை கூடவுள்ள நிலையில், அதற்கு முன்னர் நாளை காலையில் பிரதமர் தலைமையில் வாழ்க்கை செலவு பற்றிய அமைச்சரவை உபகுழு கூடி இந்த நிலைமைகளை ஆராயவுள்ளது. 

அலரிமாளிகையில் காலை 10 மணிக்கு இவ்வாறு கூடும் தலைமையில் வாழ்க்கை செலவு பற்றிய அமைச்சரவை உபகுழுவில் விலை அதிகரிப்பை மேற்கொள்ளும் தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. 

குறிப்பாக பால்மாவை 200 ரூபாவினாலும், எரிவாயுவை 550 ரூபாவினாலும், கோதுமை மாவினை 10 ரூபாவினாலும், சீமெந்தை 50 ரூபாவினாலும், அதிகரிக்க இறக்குமதியாளர்கள் முன்வைத்துள்ள கோரிக்கையை அரசாங்கத்தினால் நிராகரிக்க முடியாது போயுள்ள நிலையில் விலையேற்றம் இடம்பெறும் என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

கொழும்பு, புதுக்கடையில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி...

2024-04-16 21:07:31
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10