நாட்டுப்புற இசையை தமிழ் இசையின் முன்னோடி எனச் சொல்லலாம். அதிகம் படிக்காத பாமர மக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு சம்பவத்தையும் நாட்டுப்புற பாடலில் கொண்டுவருவது மிக அருமை.
கருத்துமிகுந்த இந்த பாடல்கள் நம்மிடையே மறைந்து வருகின்றன. நாட்டுப்புற இசையைப் பற்றி ஒரு கருத்தரங்கு வருகிற அக்டோபர் 4 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரை இணையவழி கலாமஞ்சரி நடத்த இருக்கின்றது.
இதற்கு வளர்தமிழ் இயக்கம் ஆதரவளித்திருக்கிறது. புலம்பெயர்ந்த தமிழன் தன்னோடு கலை, கலாச்சாரம், மொழி ஆகியவற்றையும் சேர்த்து எடுத்துச் சென்றான்.
அவன் சென்ற நாடுகளில் நாட்டுப்புற இசை எப்படி தோன்றியது? எப்படி வளர்ந்தது அதன் நிலை இன்று என்ன? இவற்றைப் பற்றி இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நான்கு நாடுகளிலிருந்து நான்கு பேச்சாளர்கள் பேச இருக்கின்றனர்.
“தமிழரின் நாட்டுப்புற இசை” - பன்னாட்டு கருத்தரங்கம் என்ற இந்த கருத்தரங்கிற்கு தமிழறிஞர் முனைவர் சுப. திண்ணப்பன் அவர்கள் தலைமை தாங்குகிறார்.
இந்தியாவிலிருந்து முனைவர் அரிமளம் பத்மநாபன் அவர்கள், மலேசியாவிலிருந்து முனைவர் முரசு நெடுமாறன் அவர்கள், இலங்கையிலிருந்து முனைவர் மௌனகுரு அவர்கள், சிங்கப்பூரிலிருந்து திருமதி. சௌந்தரநாயகி வயிரவன் ஆகியோர் இந்த கருத்தரங்கில் உரையாற்ற இருக்கின்றனர்.
தலைமையுரை
முனைவர் டாக்டர். சுப. திண்ணப்பன், சிங்கப்பூர்
மலேசிய நாட்டுப்புறப் பாடல்கள் காட்டும் சமுதாயச் சிக்கல்கள் முனைவர் முரசு நெடுமாறன், மலேசியா
தமிழக நாட்டுப்புற இசை - மூலக் கூறுகளும் பரிமாணங்களும் முனைவர் அரிமளம் பத்மநாபன், இந்தியா
இலங்கைத் தமிழர் நாட்டுப் புற இசை - ஊற்றுகளும் ஓட்டங்களும் முனைவர் மௌனகுரு, இலங்கை
சிங்கப்பூரில் நாட்டுப்புற இசையின் இப்போதைய நாட்டம் திருமதி. சௌந்தர நாயகி வயிரவன், சிங்கப்பூர்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM