அமெரிக்காவில் நடைபெறவுள்ள குவாட் கூட்டணி தலைவர்கள் மாநாட்டில் இந்து - பசுபிக் பிராந்தியத்தின் நவீன சவால்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளனர்.
அமெரிக்கா, இந்தியா, அவுஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய 4 நாடுகள் இணைந்து கடந்த 2007 ஆம் ஆண்டில் குவாட் கூட்டணி உருவாக்கப்பட்டது.
குவாட் கூட்டணி நாடுகளின் தலைவர்கள் முதல்முறையாக கடந்த மார்ச் மாதம் மெய்நிகர் மாநாட்டை நடத்தினர்.
இதன்போது அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இந்திய பிரதமர் மோடி, அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன், ஜப்பான் பிரதமர் யோஷிகிடே சுகா ஆகியோர் பங்கேற்றனர்.
கொரோனா தடுப்பூசி, பருவநிலை மாற்றம் மற்றும் தொழில்நுட்பம் உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடினர்.
இந்நிலையில் குவாட் தலைவர்கள் நேரடியாக பங்கேற்கும் முதல் உச்சி மாநாடு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் இன்று சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையில் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மோரிஸ் மற்றும் ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
தடுப்பூசிகள் முதல் சட்டவிரோத மீன்பிடித்தல் வரை பல்வேறு விடயங்கள் இதன் போது கருத்தில்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்து - பசிபிக் பிராந்திய ஒத்துழைப்புகள் மற்றும் நவீன சவால்கள் என்பன குறித்தும் இதன் போது குவாட் தலைவர்கள் கலந்துரையாடவுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM