கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பி.சி.ஆர்.சோதனை நிலையங்கள் இன்று முதல் செயல்படும்.
இந்த திட்டத்தின் முதற்கட்டமாக வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்கு வருகை தரும் பயணிகளுக்கு பி.சி.ஆர். சோதனை மேற்கொள்ளப்படும்.
ஒரு பி.சி.ஆர். சோதனைக்கு 40 அமெரிக்க டொலர்கள் அறவிடப்படும். அதேநேரத்தில் ஆய்வகம் சோதனைகளை ஒவ்வொரு மணிநேரமும் 500 சோதனைகள் அடங்கலாக அன்றாடம் 7 ஆயிரம் சோதனைகளை மேற்கொள்ளும்.
பி.சி.ஆர். சோதனைகளின் முடிவுகள் மூன்று மணி நேரத்திற்குள் வெளியிடப்படும்.
அதன்படி சுற்றுலாப் பயணிகள் எதிர்மறையான சோதனை முடிவுகளை அளித்து, கொரோனா வைரஸுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போட்டால், தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறைக்கு உட்படுத்தாமல் சுதந்திரமாக நாட்டிற்குள் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
ஒரு விசேட சலுகையின் கீழ், இலங்கை வெளிநாட்டு தொழிலாளர்களுக்கும் சோதனைகள் முன்னெடுக்கப்படும்.
வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர். பரிசோதனைகளின் அறிக்கை, சுமார் 2 - 3 மணித்தியாலங்களுக்குள் விநியோகிக்கப்படுவதால், இதன்போது எவருக்கேனும் தொற்று உறுதியானால், உரிய பொதுச் சுகாதார அதிகாரிக்கு அறிவிக்கப்பட்டு, தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கான ஆலோசனைகள் வழங்கப்படும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM