சிறுவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணி தேசிய மட்டத்தில் முன்னெடுக்கப்படும் - கெஹலிய

Published By: Gayathri

24 Sep, 2021 | 06:02 PM
image

(இராஜதுரை ஹஷான்)

12 வயதிற்கு மேற்பட்ட அனைத்து சிறுவர்களுக்கும் பைஸர் தடுப்பூசி வழங்குவதற்கான நடவடிக்கை சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

விசேட தேவையுடை மற்றும் நாட்பட்ட நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணி எதிர்வரும் வாரம் முதல் தேசிய மட்டத்தில் முன்னெடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

விசேட தேவையுடைய மற்றும் நாட்பட்ட நோய்களினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் தேசிய செயற்றிட்டம்  கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் சிராந்தி ராஜபக்ஷ தலைமையில் இன்று ஆரம்பமானது. இதன் போது ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் சுகாதாரத்துறை அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கொவிட்-19 வைரஸ் தொற்றின் பாதிப்பையும், மரண வீதத்தையும் குறைக்கும் நோக்கில்  விசேட தேவையுடைய மற்றும் நாட்பட்ட நோயினால் பாதிக்கப்பட்ட 12 தொடக்கம் 19 வயதிற்குட்பட்டவர்களுக்கு பைஸர் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு, குருநாகல் மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் விசேட தேவையுடைய மற்றும் நாட்பட்ட நோயினால் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. 

சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் செயற்றிட்டம் எதிர்வரும் வாரம் முதல் தேசிய மட்டத்தில் முன்னெடுக்கப்படும்.

விசேட தேவையுடைய மற்றும் நாட்பட்ட நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் செயற்றிட்டம் முதற்கட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

இவ்வாறான சிறுவர்கள் அதிகமாக வாழும் குருநாகல் மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு முன்னுரிமை வழங்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார் என சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31