கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் போராட்டத்தில் குதிப்போம் - அரச தாதிய அதிகாரிகளின் சங்கம் 

Published By: Digital Desk 4

24 Sep, 2021 | 03:51 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

கொவிட் தொற்று கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கத்தினால் எதிர்பார்க்கப்படும் ஒத்துழைப்பு கிடைக்காவிட்டால் எதிர்வரும் திங்கட்கிழமை தொழிற்சங்க போராட்டத்துக்கு செல்வோம் என அரச தாதிய அதிகாரிகளின் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.

கொவிட் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் சுகாதார பிரிவினருக்கு வழங்கப்படும் கொடுப்பனவில் அரசாங்கம் குறைப்பு செய்திருப்பது தொடர்பில் குறிப்படுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

கொவிட் தொற்று கட்டுப்படுத்தவதற்காக உயிரை பணயம் வைத்து செயற்படுகின்ற சுகாதார துறையின் கொரோனா உதவி தொகையாக மாதாந்தம் 7ஆயிரத்தி 500ரூபா வழங்கி வந்தது.

தற்போது அந்த தொகையை முற்றாக நீக்கி இருக்கின்றது. அதேபோன்று எமது ஊழியர்கள் ஆளணி பற்றாக்குறை காரணமாக மேலதிக நேரமாக மாதத்துக்கு 200 முதல் 250 மணித்தியாலங்கள்  சேவை செய்கின்றனர். அதற்கான கொடுப்பனவையும் குறைத்திருக்கின்றது.

அத்துடன் ஆளணி பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி இருக்கின்றபோதும் அதனை செய்வதும் இல்லை.

ஊழியர்களுக்கு தேவையான சுகாதார பாதுகாப்பு வசதிகளையும் இதுவரை வழங்காமல் இருக்கின்றது. இவ்வாறான நிலையில் கொவிட் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கத்திடம் எதிர்பார்க்கப்படும் ஆதரவு கிடைக்கப்பெறாவிட்டால் எதிர்வரும் 27ஆம் திகதி திங்கட்கிழமை பாரிய தொழிற்சங்க போராட்டம் ஒன்றுக்கு செல்வோம்.

மேலும் நாட்டில் கொராே நோயாளர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிககையில் குறைவு ஏற்பட்டிருப்பது மகிழ்ச்சியாக இருக்கின்றது.

என்றாலும் அரசாங்கத்தின் தோல்வியடைந்த சுகாதார முகாமைத்துவம் காரணமாக எந்த சந்தர்ப்பத்திலும்  மீண்டுமொரு கொராே அலை ஒன்று ஏற்படும் அபாயம் இருக்கின்றது.

அத்துடன் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை குறைந்தாலும் வீடுகளில் மரணிப்பவர்களின் வீதம் அதிகரித்திருக்கின்றது. இது நல்ல நிலைமையல்ல. அதனால் கொவிட் தொடர்பான பரிசோதனைகளை முறையாக மேற்கொண்டு, நாட்டின் உண்மை நிலைமையை புரிந்துகொள்ளவேண்டும் என அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:25:16
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01