(ஆர்.யசி)
உள்ளக பொறிமுறைகள் மூலமாக பொறுப்புக்கூறல் முன்னெடுக்கப்படும் என்றால் அதற்காக அரசாங்கம் 12 வருட காலத்தை கடத்தியிருக்க வேண்டிய அவசியம் இல்லை.
யுத்தம் முடிவுக்கு வந்த இரண்டு ஆண்டுகளில் உள்ளக பொறிமுறைகளை கையாண்டு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுத்திருக்க முடியும். ஏன் அவ்வாறான எந்த முயற்சிகளையும் அரசாங்கம் முன்னெடுக்கவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு கேள்வி எழுப்புகின்றது.
ஜனாதிபதியினதும் அரசாங்கத்தினதும் பொய்யான வாக்குறுதிகளை நம்பி கால அவகாசங்களை வழங்காது பொறுப்புக்கூறல் விடயங்களை வலுவாக்கும் காத்திரமான தீர்மானம் ஒன்றினை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முன்னெடுக்கும் நகர்வுகளை சர்வதேசம் உறுதிப்படுத்த வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷ உரையாற்றியுள்ள நிலையில் உள்ளக பொறிமுறை மூலமாக பொறுப்புக்கூறல் மற்றும் ஏனைய பிரச்சினைகளுக்கு தீர்வுகளை எட்ட அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும், அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் சர்வதேச ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ள நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு என்னவென்பதை தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM