யுத்தகாலத்தில் காணாமல்போனோருக்கு என்ன நடந்ததென ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் சரியான தகவலை வெளிப்படுத்த முடியும் - டலஸ் 

Published By: Digital Desk 4

22 Sep, 2021 | 08:27 PM
image

(எம்.மனோசித்ரா)

யுத்த காலத்தில் காணாமல் போனோருக்கு என்ன ஆயிற்று என்பதற்கு என்னால் பொறுப்பான பதிலை வழங்க முடியாது. எனினும் இது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மறைக்கப்படக் கூடிய விடயமல்ல.

ஏதேனுமொரு சந்தர்ப்பத்தில் இது தொடர்பில் சரியான தகவல்களை வெளிப்படுத்த முடியும் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

Articles Tagged Under: டலஸ் அழகப்பெரும | Virakesari.lk

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று புதன்கிழமை இணையவழியூடாக நடைபெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

யுத்த காலத்தில் காணாமல் போனோருக்கு என்ன ஆயிற்று என்பதற்கு என்னால் பொறுப்பான பதிலை வழங்க முடியாது. இது தொடர்பில் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான அலுவலகம் நிறுவப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரை சந்தித்த போது புலம்பெயர் தமிழர்களுடனான பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார்.

இது மிகவும் ஆக்கபூர்வமான வெளிப்பாடாகும். பாராளுமன்றத்திலும் இது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது. எவ்வாறிருப்பினும் குறிப்பிட்ட ஒரு நபரை சுட்டிக்காட்டி அவருக்கு என்ன ஆயிற்று என்று கூறுவது கடினமாகும்.

எனினும் இது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மறைக்கப்படக் கூடிய விடயமல்ல.

ஏதேனுமொரு சந்தர்ப்பத்தில் இது தொடர்பில் சரியான தகவல்களை வெளிப்படுத்த முடியும். சில இடங்களில் காணாமல் போனதாக கருதப்படும் நபர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று அரசியல் அந்தஸ்து பெற்று அங்கு வாழ்கின்றனர்.

ஆனால் அனைத்து சந்தர்ப்பங்களிலும் இவ்வாறு நடப்பதில்லை.

தமது பிள்ளைகள் காணாமல் போயுள்ளதாக பெற்றோர் ஒவ்வொரு ஆண்டும் கண்ணீர் சிந்துகின்றனர். இவர்கள் அனைவரும் நாட்டு பிரஜைகளாவர்.

எனவே இது தொடர்பில் பொறுப்புடன் செயற்பட வேண்டியுள்ளது. ஆனால் இதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. ஒன்றிணைந்த தேடலின் ஊடாகவே இதற்கான தீர்வைப் பெற முடியும்.  நாம் அனைவரும் இலங்கையர்கள் என்ற ரீதியில் இது போன்றதொரு நிலைமை மீண்டும் ஏற்படாமல் அனைவரும் செயற்பட வேண்டும் என்பதே இதற்கான இறுதி பதிலாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36