(எம்.மனோசித்ரா)
மட்டக்குளி - காக்கைதீவு பிரதேசத்தில் கடந்த 5 தினங்களுக்கு முன்னர் சடலமாக மீட்க்கப்பட்ட நபரின் கொலையுடன் இராணுவத்தினர் தொடர்புபட்டுள்ளனரா என்பது தொடர்பில் பொலிஸாரால் முன்னெடுத்துள்ள விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
விசாரணைகளுக்கு இராணுவம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் நிலாந்த பிரேமரத்ன தெரிவித்தார்.
மட்டக்குளி பிரதேசத்தில் கடமையாற்றும் கிராம உத்தியோகத்தரான பெண்ணொருவரின் கணவனே இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டிருந்தார்.
மட்டக்குளி பகுதியிலுள்ள இராணுவ முகாமிலுள்ள சிப்பாயொருவர் பாதிக்கப்பட்ட குடும்பத்துடன் தொடர்பினை பேணியுள்ளமை மற்றும் குறித்த சிப்பாய் மேலும் ஐவரது ஒத்துழைப்புடன் இந்த கொலையுடன் தொடர்புபட்டுள்ளதாக சந்தேகிப்பதாக மட்டக்குளி பொலிஸார் அறிவித்துள்ளனர்.
அதற்கமைய இந்த கொலையுடன் வேறு இராணுவ சிப்பாய்கள் தொடர்புபட்டுள்ளனரா என்பதைக் கண்டறியும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதோடு, அவ்வாறு எவரேனும் இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளமை இனங்காணப்பட்டால் அவர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரிகேடியர் நிலாந்த பிரேமரத்ன தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM