அரசியல் கைதிகளுக்கு கொலை அச்சுறுத்தல் ; பாராளுமன்றில் நாளை விசேட பிரேரணை

Published By: Digital Desk 4

21 Sep, 2021 | 09:50 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) 

அனுராதபுரம் சிறைச்சாலையில்  இராஜாங்க அமைச்சரால் அரசியல் கைதிகளுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில் பாராளுமன்றில்  நாளை புதன்கிழமை  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தால்   விசேட பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது. 

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் போர் குற்றங்களில் ஈடுபடவில்லை - கஜேந்திரகுமார்  பொன்னம்பலம் | Virakesari.lk

சிறைச்சாலை மற்றும் கைதிகள் புனர்வாழ்வு தொடர்பான இராஜாங்க அமைச்சர் லொஹான்  ரத்வத்த  , தனது பதவிநிலை அதிகாரத்தை பயன்படுத்தி கடந்த 12/09/21 அன்று மாலை 6  மணியளவில், நிறை போதைக்குள்ளான நிலையிலும்  , அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று  பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளை தனக்கு முன் கொண்டுவந்து நிறுத்துமாறு பணித்திருந்தார். 

அவருக்கு முன் முழந்தாழிட்டு நிறுத்தப்பட்ட கைதிகளது தலையில் துப்பாக்கியை வைத்து கொலை மிரட்டல் விடுத்திருந்தார். மேற்படி சம்பவம் தொடர்பில் பொது முக்கியத்துவம் வாய்ந்த அவசர பிரச்சினை குறித்து கட்சிதலைவரினால் பாராளுமன்ற நிலையியல் கட்டளைச் சட்டம் 27(2) இன் கீழ்முன்வைக்கப்படும் பிரேரணை / கேள்வி ஒன்றினை நாளை  புதன்கிழமை மேற்கொள்வதற்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தால் சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22