(எம்.மனோசித்ரா)
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஐ.நா. பொதுச் செயலாளரிடம் குறிப்பிட்ட விடயங்களில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது என்பதற்கான உண்மையை தேடல், அவர்களுக்கான நீதி மற்றும் தவறிழைத்தவர்களுக்கான பொறுப்பு கூறல் உள்ளிட்டவை தொடர்பில் எதுவுமே குறிப்பிடப்படவில்லை.
அரசாங்கம் உண்மையை கண்டறிவதற்கோ அல்லது பொறுப்பானவர்களை பொறுப்பு கூறச் செய்வதற்கோ எவ்விதமான நடவடிக்கைகளையும் செய்யப்போவதில்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் தெரிவித்தார்.
நல்லிணக்கத்திற்காக இணைந்து செயற்படுமாறு அழைப்பு விடுத்துள்ள ஜனாதிபதி , அண்மையில் சுமார் 300 புலம்பெயர் தமிழர் அமைப்புக்களுக்கு தடையையும் விதித்தார்.
இதன் மூலம் ஒரு புறம் தடையையும் விதித்து , மறுபுறம் புலம்பெயர் தமிழர்களுக்கு அழைப்பு விடுக்கின்றமை உண்மைக்கு மாறானதல்லவா? இது எம் அனைவரையும் கேலிக்குட்படுத்துவதைப் போன்றுள்ளது என்றும் அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டினார்.
ஐ.நா. பொதுச் செயலாளருடனான சந்திப்பின் போது ஜனாதிபதியால் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் வினவிய போது கேசரிக்கு இதனைத் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM