(நா.தனுஜா)
எதிர்க்கட்சியினர் கொவிட் - 19 வைரஸ் பரவலை தமது தனிப்பட்ட அரசியல் நலன்களுக்காகப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
ஆரம்பத்திலிருந்தே இந்தத் தொற்று நாடு முழுவதும் பரவி, அதன் விளைவாக நாடும் நாட்டு மக்களும் பாதிக்கப்படவேண்டும் என்பதே எதிர்க்கட்சியின் தேவையாக இருந்தது என்று கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஊடகங்களுக்குக் கருத்துவெளியிட்டுள்ள அவர் மேலும் கூறியிருப்பதாவது:
கொவிட் - 19 வைரஸ் பரவல் காரணமாக நாட்டின் பொருளாதாரம் பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் சூழ்நிலையில், ஒருபுறம் அதனை முகாமை செய்வதுடன் மறுபுறம் மக்களுக்கு அவசியமான நிவாரணங்களை வழங்கி நாட்டை முன்நோக்கிக்கொண்டு செல்வதற்கு அவசியமான நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதற்கு அவசியமான நடவடிக்கைகள் சுகாதாரப்பிரிவினரின் ஆலோசனைகளுக்கு அமைவாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசி வழங்கல் பணிகள் மிகவும் செயற்றிறனான வகையில் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் அது சர்வதேசத்தின் அங்கீகாரத்தையும் பெற்றிருக்கின்றது.
இன்றளவில் ஒட்டுமொத்த உலகத்திற்கும் பாரிய சவாலாக மாறியிருக்கும் கொவிட் - 19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு அனைத்து நாடுகளும் முக்கியத்துவம் வழங்கிவருவதுடன் அன்றாட செயற்பாடுகளை மீண்டும் பழையநிலைக்குத் திருப்புவதற்கு அவசியமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
அந்தவகையில் எமது நாட்டிலும் பொருளாதார, சமூக, கலாசாரம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளினதும் செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடையாமல் இருப்பதனை உறுதிசெய்வதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக மாணவர்களின் கல்விச்செயற்பாடுகள் வெகுவாகப் பாதிப்படைந்திருப்பதன் காரணமாக பாடசாலைகளை இயலுமானவரை விரைவில் மீளத்திறப்பதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்றன.
இதன்போது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் சுகாதாரப்பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கப்படுகின்றது.
சுகாதாரப்பாதுகாப்பை உறுதிசெய்யும் அதேவேளை, மாணவர்களின் கல்விச்செயற்பாடுகளையும் வெகுவிரைவில் ஆரம்பிக்கமுடியும் என்று நாம் நம்புகின்றோம்.
எதிர்க்கட்சியினர் கொவிட் - 19 வைரஸ் பரவலை தமது தனிப்பட்ட அரசியல் நலன்களுக்காகப் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் கூறுகின்ற விடயங்கள் மற்றும் அவர்களின் செயற்பாடுகள் மூலம் அது தெளிவாகின்றது.
ஆரம்பத்திலிருந்தே இந்தத் தொற்று நாடு முழுவதும் பரவி, அதன் விளைவாக நாடும் நாட்டுமக்களும் பாதிக்கப்படவேண்டும் என்பதே எதிர்க்கட்சியின் தேவையாக இருந்தது. எதிர்க்கட்சியின் அத்தகைய போக்கினை பொதுமக்கள் முழுமையாக எதிர்க்கவேண்டும் என்று குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM