(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
கடன் நெருக்கடிக்கும் வெளிநாட்டு கையிருப்பு இல்லாமல் போனமைக்கும் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷவோ எமது அரசாங்கமோ காரணமல்ல.
கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட தவறான வெளிநாட்டு கொள்கையும் அனர்த்தங்கள், கொவிட் நெருக்கடிகளே காரணம் என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன சபையில் தெரிவித்தார்.
மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் அறிவித்தல், துறைமுகங்கள் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழ் 05 கட்டளைகள், விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான 06 கட்டளைகள், வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழான 03 ஒழுங்குவிதிகள், வெளிநாட்டு செலாவணிச் சட்டத்தின் கீழான கட்டளை மற்றும் இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகள் (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழான ஒழுங்கிவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
நாடு மிகப்பெரிய வெளிநாட்டு செலாவணி நெருக்கடி நிலைமைக்கு முகங்கொடுத்து வருகின்றது. இது வெறுமனே கொவிட் வைரஸ் பரவல் காரணங்களின் தாக்கமாக மட்டும் கூறிவிட முடியாது.
தேயிலை, தென்னை,இறப்பர் ஏற்றுமதிக்கான சர்வதேச சந்தையை தேடியாக வேண்டும். ஆடை உற்பத்தியை மீண்டும் பலப்படுத்த வேண்டும், அவ்வாறான நிலையில் தான் எம்மால் நெருக்கடியை தாண்டி செல்ல முடியும்.
இன்று பங்களாதேஷ், தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற நாடுகள் இலங்கையின் இடத்தை பிடித்துள்ளது. அவற்றை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். இவ்வாறான நெருக்கடி நிலையில் நாட்டை முடக்கி விமான நிலையங்களை முடக்கி வைத்துள்ளோம்.
அதேபோல் தாக்கு பிடிக்க முடியாத அளவிற்கு அபிவிருத்தி கடன்களை பெற்றுள்ளோம். 2029ஆம் ஆண்டு வரையில் இந்த நெருக்கடிக்கு நாம் முகங்கொடுக்க வேண்டியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM