மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு விளக்கமறியல்

Published By: Ponmalar

15 Sep, 2016 | 02:28 PM
image

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவை எதிர்வரும் 22 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த உத்தரவினை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (15) பிறப்பித்துள்ளது.

இவர் விளையாட்டுத்துறை அமைச்சராக செயற்பட்ட காலப்பகுதிகளில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக  குற்றப்புலனாய்வுப்பிரிவில் ஆஜராகிய நிலையில் இன்று  கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்