பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தை கைவிட்ட நியூஸிலாந்து அணியினர் இஸ்லாமபாத்திலிருந்து புறப்பட்டு, டுபாய் சென்றடைந்துள்ளனர்.
நியூஸிலாந்து அணி வீரர்களும், உறுப்பினர்களும் ஒரு சிறப்பு விமானத்தின் மூலமாக சனிக்கிழமை இரவு இஸ்லாமபாத்திலிருந்து புறப்பட்டு டுபாய் சென்றடைந்துள்ளனர்.
அங்கு 34 பேர் கொண்ட குழு 24 மணி நேர சுய தனிமைப்படுத்தலுக்கு தற்சமயம் உட்படுத்தப்பட்டுள்ளதாக நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அவர்களில் 24 பேர் அடுத்த வாரம் நாடு திரும்புவார்கள். மீதமுள்ளவர்கள் அக்டோபர் 17 முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமனில் ஆரம்பமாகவுள்ள 2021 ஐ.சி.சி. ஆண்கள் டி-20 உலகக் கிண்ணத்துக்கான நியூஸிலாந்து அணியுன் ஏனைய வீரர்களுடன் இணைந்து கொள்வார்கள்.
நியூஸிலாந்து அணியினர் 18 வருடங்களுக்கு பின்னர் முதன்முறையாக வரையறுக்கப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டனர்.
ராவல்பிண்டியில் மூன்று ஒருநாள் போட்டிகளிலும், லாகூரில் ஐந்து டி-20 போட்டிகளிலும் பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்து.
இந் நிலையில் ஒருநாள் தொடரின் முதல் போட்டி ராவல்பிண்டியில் ஆரம்பமாவதற்கு சில மணிநேரங்களின் முன்னர், நியூஸிலாந்து அரசாங்கத்தினால் கிடைக்கப் பெற்ற பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக தொடரை கைவிடுவதாக நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM