ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் விண்வெளி சுற்றுலாவில் பங்கெடுத்து நான்கு நபர்கள், சுற்றுப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து செப்டெம்பர் 18 அன்று புளோரிடா கடற்கரையில் பாதுகாப்பாக தரையிறங்கினர்.
நான்கு ஸ்பேஸ்எக்ஸ் சுற்றுலாப் பயணிகள் புளோரிடா கடற்கரையில் அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை இரவு 7.00 மணியளவில் (23.00 GMT) நான்கு பெரிய பாராசூட்டுகள் மூலம் தரையிறங்கினர்.
ஸ்பேஸ்எக்ஸ் விணகலத்தின் வெப்பக் கவசம் அவர்கள் பாராசூட்டுகளில் பாதுகாப்பாக தரையிறங்குவதற்கு அனுமதித்துள்ளது.
பின்னர் அவர்கள் படகு மூலம் கடற்பரப்பிலிருந்து வெளியேற்றப்பட்டு, தரைக்கு கொண்டு வரப்பட்டனர்.
தொழில்முறை விண்வெளி வீரர்கள் எவரும் இல்லாமல் பூமியின் சுற்றுப் பாதையினை மூன்று நாட்கள் இவர்கள் இன்ஸ்பிரேஷன் - 4 என்ற விண்கலத்தினூடாக சுற்றி வந்தனர்.
அமெரிக்காவின் இ-காமர்ஸ் நிர்வாகி கோடீஸ்வரர் ஜாரெட் ஐசக்மேன் தலைமையிலான 4 பேர் கொண்ட குழுவினரை ஏற்றுச் சென்ற விண்கலம் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து உள்ளூர் நேரப்படி கடந்த புதன்கிழமை இரவு (00:03 GMT வியாழன்) புறப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM