(எம்.எம்.சில்வெஸ்டர்)
மாலைத்தீவில் அடுத்த மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ள தெற்காசிய கால்பந்தாட்ட வல்லவர் போட்டியை முன்னிட்டு சிறப்பு பயிற்சிகளை பெற்றுக்கொள்வதற்காக இலங்கை கால்பந்தாட்ட குழாம் இன்று சவூதி அரேபியா நோக்கிய பயணமானது.
இலங்கை கால்பந்தாட்ட அணிக்கு கட்டாரில் கால்பந்தாட்ட பயிற்சிகள் வழங்கப்படும் என ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும், கட்டாரில் கடுமையான சுகாதார வழிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளதால் இலங்கை கால்பந்தாட்ட குழாம் கத்தாருக்கு செல்வதற்கு முடியாது போனது.
இதன் காரணமாக இலங்கை கால்பந்தாட்ட குழாத்தினருக்கான விசேட பயிற்சி சவூதி அரேபியாவில் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
எட்டு நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியின் நிறைவில் இலங்கை குழாம் நேரடியாகவே மாலைத்தீவு நோக்கிய பயணமாகும்.
இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், நேபாளம் மற்றும் போட்டி ஏற்பாடு நாடான மாலைத்தீவு ஆகிய 5 நாடுகள் பங்கேற்கும் தெற்காசிய கால்பந்தாட்ட வல்லவர் போட்டி ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை மாலைத்தீவின் மாலே நகரில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM