(என்.ஜெகதீஸ்)
கல்வி அமைச்சிலிருந்து வெளியேறுமாரு கடுவலை நீதமன்றம் அறிவித்துள்ள நிலையில், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர்கள் தற்காலிகமாக கலைந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கல்வியமைச்சின் முன் நிறுத்திவைக்கப்பட்ட வைத்தியர்களின் வாகனங்களிலுள்ள டயர்கள் செயழிலக்க செய்யப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியள்ளது.
தரம் ஒன்றிற்கு தமது பிள்ளைகளை சேர்ப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை தொடர்பில் கலந்துரையாட கல்வியமைச்சரை சந்திக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நேற்று (14) கல்வியமைச்சில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர்கள் கூடியிருந்தனர்.
இதேவேளை இன்று காலை மீண்டும் கல்வியமைச்சின் முன்னாள் வைத்தியர்கள் கூடியிருந்த நிலையில் கடுவலை நீதமன்றம் வைத்தியர்களை வெளியேறுமாரு உத்தரவிட்டிருந்ததையடுத்து வைத்தியர்கள் கலைந்துச்சென்றுள்ளனர்.
எவ்வாறாயினும் கண்டி, மாத்தறை மற்றும் குருநாகல் போன்ற மாவட்டங்களில் பணிப்பகிஷ்கரிப்பு இன்று காலை 8 மணியிலிருந்து 12 மணிவரை இடம்பெற்றதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM