(எம்.எப்.எம்.பஸீர்)
இணைய வழியே கற்பித்தல் செயற்பாடுகளை நிறுத்துமாறு எவரேனும், அச்செயற்பாடுகளில் ஈடுபடும் ஆசிரியர்களை அச்சுறுத்தினால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
அரச ஊழியர்களின் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கின்றமை மற்றும் அச்சுறுத்தல் விடுக்கின்றமை தண்டனைக்குரிய குற்றம் என்பதால், அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக விசேட கவனம் செலுத்த பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிலையில் எவரேனும் கற்பித்தல் நடவடிக்கைகளை நிறுத்துமாறு அச்சுறுத்தல் விடுக்கும் பட்சத்தில் அது குறித்து முறைப்பாடு செய்யுமாறு இணைய வழி ஊடாக கற்பித்தலில் ஈடுபடும் பாடசாலை ஆசிரியர்களை பொலிஸ் தலைமையகம் கோரியுள்ளது.
அதனடிப்படையில், குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கோ, 119 எனும் அவசர அழைப்பு தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவோ அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களிலோ முறையிட முடியும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM