கிளிநொச்சி மாவட்டத்தில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் குடிநீர் வசதியினை பெற்றுள்ள பொது மக்கள் தங்கள் மாதாந்த நீர் பட்டியல் கொடுப்பனவுகளையும் நிலுவை கொடுப்பனவுகளையும் தாமதமின்றி செலுத்துமாறு கோரப்பட்டுள்ளனர்.
தற்போதைய முடக்க நிலை மற்றும் கொரோனா தொற்றினை கருத்தில் கொண்டு பொது மக்கள் தங்களது நீர்ப் பட்டியல் கொடுப்பனவுகளை பாதுகாப்பாகவும், இலகுவாகவும் செலுத்த முடியும் எனவும் அதற்காக வரிசையில் காத்திருக்காது https://ebis.waterboard.lk/smartzone/English/OnlinePayments எனும் எமது இணையத்தளத்தைிற்குச் சென்று தன்னியக்க பணமரிமாற்று அட்டைகள் அல்லது கடன் அட்டைகள் மூலமாக இலகுவாக கட்டணங்களை செலுத்திக் கொள்ள முடியும்.
அத்தோடு, பொது மக்கள் தங்களது ஸ்மார்ட் தொலைபேசியில் NWSDB Self Care அல்லது NWSDB Smart pay ஆகிய செயலிகளை தரவிறக்கம் செய்வதன் ஊடாக நீர் பாவனை, கட்டணங்கள் தொடர்பான அனைத்து விபரங்களையும் அறிந்துகொள்வதோடு, இலகுவாக கட்டணங்களையும் செலுத்திகொள்ள முடியும்.
மேலும், பொது மக்களின் நலன் கருதி தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் 155 ஆம் கட்டை ஏ9 வீதியில் அமைந்துள்ள மாவட்ட காரியாலயத்திலும் இம் மாதம் 21,22, 23 ஆம் திகதிகளில் மாத்திரம் நீர்ப் பட்டியல் கட்டணத்தை நேரடியாகவும் செலுத்த முடியும் எனவும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் கிளிநொச்சி மாவட்ட பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு மேற்படி முகவரியில் அமைந்துள்ள எமது காரியாலயத்திற்கோ, அல்லது 021 2283981 எனும் தொலைபேசி இலக்கத்துடனோ தொடர்பு கொள்ளுமாறும் அவர் பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM