பாலியல் தொழில் இணையத்தளத்தை நடத்தி வந்த சந்தேக நபர் கைது

17 Sep, 2021 | 11:36 AM
image

(எம்.மனோசித்ரா)

பாலியல் செயற்பாடுகளுக்காக பெண்கள் மற்றும் சிறுமிகளை விற்பனை செய்வதற்காக இணையதளமொன்றை நடத்தி வந்த சந்தேகநபரொருவர் குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

15 வயதுடைய சிறுமியொருவரை பாலியல் தொழிலுக்காக விற்பனை செய்தமை மற்றும் இது தொடர்பில் இணையதளங்களில் விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் சிறுவர் மற்றும் மகளிர் குற்ற விசாரணைப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த விசாரணைகள் மூலம் தெரியவந்த தகவல்களுக்கமைய நேற்று  வியாழக்கிழமை குற்ற விசாரணைப் பிரிவினரால் இரத்தினபுரி - கலவான பிரதேசத்தில் இவ்வாறான பாலியல் செயற்பாடுகளுக்காக பெண்கள் மற்றும் சிறுமிகளை விற்பனை செய்வதற்காக பயன்படுத்தப்பட்டு வந்த இணையதளம் தொடர்பில் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதற்கமைய இந்த விசாரணையில் இதுவரை 46 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்ற விசாரணைப் பிரிவு மற்றும் சிறுவர் மற்றும் மகளிர் குற்ற விசாரணைப் பிரிவு ஆகியவற்றினால் இது தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51