மொனராகலை பிரதேச சபையின் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னனி உறுப்பினரின் பதவியை நீக்கக்கோரி, மொனராகலை மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விசாரணையையடுத்து , குறித்த உறுப்பினர் பதவி நீக்கப்பட்டதுடன், ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினரொருவருக்கு சபை உறுப்பினர் பதவி வழங்க தீர்ப்பு வழங்கப்பட்டது.
மொனராகலை மேல் நீதிமன்றத்தில் நீதிபதி ரங்க திசாநாயக்க முன்னிலையில் நேற்று, மேற்படி வழக்கு மீதான மனு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மொனராகலை பிரதேச சபை உறுப்பினர் தரங்க ஹர்சன திசாநாயக்க கோடிக்கணக்கான பணத்தை வாக்காளர்களுக்கு இலவசமாகக் கொடுத்து வெற்றி பெற்றுள்ளார்.
இதனால் எனது வெற்றி தடுக்கப்பட்டுள்ளது. மோசடியான முறையில் பெற்ற வெற்றியினால் பெறப்பட்ட, சபை உறுப்பினர் பதவியை நீர்க்கக்கோரியே, மேற்படி வழக்கு மீதான மனு, மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
மொனராகலை பிரதேச சபைக்கு போட்டியிட்ட ஐ.தே.க. உறுப்பினர் டப்ளிவ்.எம். சுனில் சாந்த என்பவரினால் மேற்படி மனு தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் ஏற்பட்ட மோசடி குறித்தே தாக்கல் செய்யப்பட்ட மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இம்மனுவில் பிரதிவாதியாக மொனராகலை தெரிவு அத்தாட்சி அலுவலர் , மாவட்ட தேர்தல் உதவி ஆணையாளர், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட 95 பேரினது பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. 12 பேர் சாட்சியாளர்களாக அழைக்கப்பட்டிருந்தனர்.
இவ்வழக்கில் மனுதாரர் சார்பில் சட்டதரணிகளான சம்பத் புஸ்பகுமார , சானக்க குலதுங்க ஆகியோரும், பிரதிவாதி சார்பில் சட்டதரணிகளான வி.ஆர். சில்வா , ராஜகருனா ஆகியோரும் ஆஜராகியிருந்தனர்.
நீண்ட விசாரணைகளையடுத்து, நீதிபதி தமது தீர்ப்பில், குறிப்பிட்ட பிரதேச சபையின் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி உறுப்பினர் தரங்க ஹர்சன திசாநாயக்கவின் உறுப்பினர் பதவி நீக்கப்பட்டதுடன், அடுத்தபடியாக ஆகக்கூடுதல் வாக்குகளைப்பெற்ற ஐக்கிய தேசியக்கட்சி பட்டியலிலுள்ள டபிள்யு. எம். சுனில் சாந்தவை ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்திற்கு நியமிக்குமாறும் குறிப்பிட்டார்.
இத்தீர்ப்பு விடயம் , ஜனாதிபதி மற்றும் தேர்தல் ஆணையாளர் ஆகியோருக்கும் அனுப்புவதற்கும் நீதிபதி உத்தரவிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM