மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில் உள்ள கருவப்பங்கேணி பிரதேசத்தில் பிரபல கசிப்பு கஞ்சா வியாபாரி உட்பட இருவரை 70,250 மில்லி லீற்றர் கசிப்புடன் இன்று புதன்கிழமை (15) பகல் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து போதை ஒழிப்பு பிரிவு பொறுப்பு அதிகாரி தலைமையிலான பொலிசார் குறித்த பிரதேசத்திலுள்ள வீட்டை சம்பவதினமான இன்று பகல் முற்றுகையிட்டனர்.
இதன் போது இருவரை கைது செய்ததுடன் வியாபாரத்துக்காக வைத்திருந்த 70 ஆயிரத்து 250 மில்லி லீற்றர் கசிப்பை மீட்டனர்.
இதில் கைதுசெய்யப்பட்ட அந்த பகுதியைச் சேர்ந்த பிரபல கசிப்பு கஞ்சா வியாபாரி பல கஞ்சா மற்றும் கசிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் வந்துள்ளதுடன் இவருக்கு எதிராக பல வழக்குகள் இருப்பதாகவும் இதில் கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM