விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவின் பணிப்புரைக்கு அமைய புதிய இலச்சினை, புதிய கருப் பொருளுடனான விளையாட்டு கீதம் ஆகியவற்றுடன் 41ஆவது தேசிய விளையாட்டு விழாவின் கடைசி அம்சமான மெய்வல்லுநர் போட்டிகள் தியகம, மஹிந்த ராஜபக் ஷ விளையாட்டரங்கில் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகியது.
இந்த வருடம் புதுப்பொலிவுடனும் நவீன வசதிகளுடனும் மெய்வல்லுநர் போட்டிகளை நடத்துவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சும் விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களமும் ஏற்பாடுகளை செய்துள்ளன.
9 மாகா ணங்களையும் சேர்ந்த 800 க்கும் மேற்பட்ட மெய்வல்லுநர்கள் தங்களது ஆற்றல்களை இன்றுமுதல் ஞாயிறுவரை வெளிப்படுத்தவுள்ளனர்.
இதுவரை நடந்து முடிந்துள்ள விளையாட்டுப் போட்டிகளில் வட மாகாணத்தைத் தவிர்ந்த ஏனைய சகல மாகாணங் களும் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளன.
மெய்வல்லுநர் போட்டிகளில் வட மாகாணம் தங்கப் பதக்கங்களை சுவீகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. போட்டிகள் இன்று காலை ஆரம்பிக்கின்றபோதிலும் உத்தியோகபூர்வ ஆரம்ப விழா இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கவுள்ளது.
விளையாட்டு தீபம் முன்னாள் தேசிய மெய்வல்லுநர்களான எம். பி. பீ. நயானனந்த, ஜயமினி இலேபெரும ஆகியோரால் ஏற்றிவைக்கப்படவுள்ளது.
தனிப்பட்டவர்களுக்கான நிகழ்ச்சிகளில் முதல் மூன்று இடங்களைப் பெறுபவர்களுக்கு முறையே 7,500 ரூபா, 5,000 ரூபா, 3,000 ரூபா வீதம் வழங்கப்படும். இதுவரை நடந்து முடிந்துள்ள போட்டிகளின் பிரகாரம் மேல் மாகாணம் 67 தங்கம், 56 வெள்ளி, 40 வெண்கலப் பதக்கங்களுடன் முதலிடத்தில் இருக்கின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM