மெனராகலை பிரதேச சபை உறுப்பினர் ஒருவர், மேல் நீதிமன்ற நீதிபதி ரங்க திஸாநாயக்கவின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பின் மூலம் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
2018 பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுன பெரமுனவின் சார்பில் டி.எம். ஹர்ஷக பிரியா திசாநாயக்க மொனராகலை பிரதேச சபையொன்றின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இத் தேர்தலில் அவர் வாக்களிப்பதற்காக வாக்காளர்களுக்கு இலஞ்சம் வழங்கியமை நிரூபிக்கப்பட்டதை அடுத்தே ஹர்ஷக பிரியா திசாநாயக்க பதவியிலிருந்து நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மின்சாரம் மற்றும் நீர் இணைப்புகளுக்கு பணம் வழங்குதல், உலர் உணவுகள் விநியோகித்தல் மற்றும் தேர்தலில் தனக்கு வாக்களிக்கும்படி வாக்காளர்களுக்கு மதுபானங்கள் வழங்கியதாக அவருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் வனசிங்க முதியன்செலகே சாந்தவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேல் நீதிமன்ற நீதிபதி ரங்க திஸாநாயக்கவின் உத்தரவினை மேல்முறையீடு செய்வதற்கு ஹர்ஷக பிரியா திசாநாயக்கவுக்கு ஆறு வாரகால அவகாசம் உள்ளது.
அவர் மேன்முறையீடு செய்யத் தவறினால் அவர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார்.
இந் நிலையில் நீதிமன்றின் இந்த உத்தரவினை சுதந்திரமானதும், நீதியுமானதுமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாடு (PAFFREL) பாராட்டியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM